போதை ஏற்றும் தாதா!



Untitled Document



புதுமுகங்களானாலும் ‘நாங்க’ டீம், பிழைக்கத் தெரிந்த புள்ளைங்கதான். கமல், ரஜினி ஆசீர்வாதம் அவர்களுக்கு மீடியா வெளிச்சத்தையும் கொடுத்திருக்கு. சாதிப்பதற்கு உசுப்பேற்றியும் விட்டிருக்கு!
- ஆர்.கே.லிங்கேசன், மேலகிருஷ்ணன்புதூர்.


ஓர் இலங்கைத் தமிழருக்கு உதவி செய்த மு.களஞ்சியத்தை, சீமான் மற்றும் ஆதரவாளர்கள் மிரட்டுவது அநாகரிகமான செயல். ‘தம்மைத் தவிர யாரும் உதவக் கூடாது’ என்று சொன்னால் அது கருணை அல்ல... அதிகாரம்!
- அ.கு.ப.இரகுநாதன்,பூவிருந்தவல்லி.


 
ஹாலிவுட் நடிகை எலிசபெத் டெய்லரின் வாசகங்கள் அனைத்தும் மனதைத் ‘தைத்தன’. அழகுப் பதுமையாக மட்டுமே அடையாளப்படுத்தப்பட்ட அவரின் நுட்பமான அறிவு, வியப்பைத் தந்தது!
 
 
- பி.கம்பர் ஒப்பிலான், சென்னை47.


போதை ஏற்றும் மது ஷாலினியை ‘தாதா’வாக கற்பனை செய்யவே முடியவில்லையே... இப்படியெல்லாம் அதிர்ச்சி கொடுப்பது நியாயமா?
 
- பா.வெங்கடகிருஷ்ணகுமார்,கோச்சடை. 
 

அப்பனூத்து கிராமத்தின் ‘சாமி வீடு’ பற்றிப் படித்தேன். அந்த வீட்டுக்குள் மரணமே நேராது என்ற நம்பிக்கையில் நிச்சயம் அமானுஷ்யத்தைத் தாண்டி ஓர் அர்த்தம் இருக்கும்.
 
- சி.டி.பூங்கோதை, விழுப்புரம். 
 

‘வட இந்தியாவிலிருந்து வேலை தேடிக் கிளம்பறவங்க சர்வ சாதாரணமா பெட்டி, படுக்கையோடு துப்பாக்கியைத் தூக்கிக்கிட்டு கிளம்புறாங்க’ என்ற பகீர் தகவல், இன்னமும் மனதைக் குடைந்து கொண்டிருக்கிறது.
 
 
- பி.வி.ருக்மணி, சென்னை99.. 
 

‘விஜயா டீச்சர்’ தொடர்கதை மிக நேர்த்தியாகச் செல்கிறது. முன் அத்தியாயங்களைப் படிக்காத ஒரு சிலரின் ஆதங்கத்தை எப்படித்தான் தெரிந்து கொள்கிறீர்களோ! முன்கதைச் சுருக்கம் போட்டு அசத்தி விட்டீர்கள்.
 
-  எஸ்.குபேரன், சிவகங்கை.
 

‘சென்னை 28’க்குப் பிறகு பல படங்களில் நடித்திருக்கும் நிதின் சத்யா, ‘சென்னை 28’ டீமுடன் போட்ட அக்ரிமென்ட்டை மீறாதிருப்பது வாவ்! அதற்காக அஜித் படத்தை இழந்திருப்பதும் ஆச்சரியமே. அந்த அக்ரிமென்ட் பலிக்க வாழ்த்துக்கள்!
 
-எஸ்.டி.ரேவதி ஸ்ரீனிவாசன், கரூர். .
 


வாரா வாரம் வெளியாகும் ‘வலைப்பேச்சு’ கமென்ட் ஒவ்வொன்றும் நச்! படித்தோம்; ரசித்தோம்; சிரித்தோம்.
 
 
- டி.கணபதி ராவ்,புதுச்சேரி.