நியூஸ் வே





*  ‘மிஸ் எர்த்’ போட்டியில் பங்கேற்க வந்த ரஷ்ய அழகி நடாலியா பெரிவெர்ஸேவா, தனது தாய்நாட்டைப் பற்றி சொன்ன கமென்ட் ரஷ்யா முழுக்க அனல் பரப்பியிருக்கிறது. ‘உங்கள் நாட்டைப் பற்றி நினைத்துப் பெருமைப்பட வைக்கும் விஷயம் எது?’ என்ற கேள்விக்கு, ‘‘எல்லோருக்கும் வேண்டியதைக் கொடுக்கும் காமதேனு பசு போன்றது அது’’ எனப் பெருமிதப்பட்ட நடாலியா, திடீரென உணர்ச்சிவசப்பட்டு, ‘‘ஆனால் என் தேசம் ஒரு பிச்சைக்காரனைப் போல இருக்கிறது. மூழ்கும் கப்பலிலிருந்து எல்லோரும் ஓடுவதைப் போல படித்தவர்கள், அறிவாளிகள், திறமைசாலிகள் பலரும் நாட்டை விட்டு ஓடுகிறார்கள்’’ என்று முழக்கமிட்டார். இதனால் அவருக்கு கிரீடமும் கிடைக்கவில்லை. ரஷ்யாவிலும் அவரை எதிர்த்து போராட்டங்கள் நடக்கின்றன.

*  ஆவணப்பட
இயக்குநர் லீனா
மணிமேகலை இப்போது முழுநீளத் திரைப்படம் உருவாக்கும் முயற்சியில் இருக்கிறார். ஸ்கிரிப்ட் தயாராகி வருகிறது.
முன்னணி ஹீரோ
ஒருவர்
நடிக்கிறார்.

*  சரண்யாவுக்கு தனது
கணவர் பொன்வண்ணன்
வரையும் ஓவியங்கள் மீது
மிகப்பெரும் காதல் உண்டு.
வீடு முழுக்க அவரது
ஓவியங்களை ஃபிரேம் செய்து
மாட்டி அழகு பார்க்கிறார்.

*  அறுபத்தெட்டு வயதைத் தொட்டுவிட்டாலும் ஜாக்கி சானின் சாகசத்தை ரசிக்கும் கூட்டத்திற்கு இப்போதும் குறைவில்லை. ஆனாலும், ‘‘நான் நடிக்கும் கடைசி ஆக்ஷன் படம் இதுதான்’’ என அறிவித்துவிட்டார் ஜாக்கி. அவர் எழுதி, இயக்கி, தயாரித்து நடிக்கும் ‘சைனீஸ் ஜோடியாக் 2012’ படம் இந்த மாதம் ரிலீஸ். ‘‘கடந்த 10 ஆண்டுகளில் எனது பெஸ்ட் படம் இது’’ என அறிவித்திருக்கும் ஜாக்கி, அதன்பின் சமூக சேவையில் ஈடுபடப் போகிறார். பட ரிலீஸுக்கு முன்பே தனது பென்ட்லி காரை ஏலம் விட்டு அறக்கட்டளைகளுக்கு பணம் கொடுத்தார்.

*  கோவை தொலைக்காட்சி நிலையத் தலைவராக பணிபுரியும் கவிஞர் ஆண்டாள் பிரியதர்ஷினி, 12.12.12 அன்று இளைமையைக் கொண்டாடும் 6 பாடல்களுடன் ஒரு ஆல்பத்தை வெளியிட இருக்கிறார். ஆல்பத்தின் பெயர் ‘சிங்கா சிங்கா நமோடா’!

*  தீயாய் இருக்கிறார் சுந்தர்.சி. ‘கலகலப்பு’ வெற்றிக்குப் பிறகு சுறுசுறுப்பு கூடியிருக்கிறது அவரிடம். ‘மதகஜராஜா’ வேலைகள் முடித்த கையோடு அடுத்த படத்திற்கு ஆயத்தமாகிவிட்டார். படத்தின் பெயர் ‘தீயா இருக்கணும் குமாரு’. ஹீரோவாக நடிப்பது சித்தார்த்.

*  டிசம்பர் 4ம் தேதி முதல் 10ம் தேதி வரை சென்னை சர் பி.டி.தியாகராயா ஹாலில் அகிரா குரோசோவா, சத்யஜித்ரே, ப்ரான்சுவா ட்ரூபோ, சார்லி சாப்ளின் உள்ளிட்ட உலக சினிமா ஆளுமைகள் பற்றி பேருரையாற்றுகிறார் எஸ்.ராமகிருஷ்ணன். உயிர்மை பதிப்பகம் சார்பாக இது நிகழ்த்தப்படுகிறது.

*  நடிகர் ஜெமினி கணேசனின் மகள் என்பதைத் தவிர டாக்டர் கமலா
செல்வராஜுக்கு கலை அடையாளம் ஏதுமில்லை. சமீபத்தில் கண்ணதாசனின் சகோதரர் ஏ.எல்.சீனிவாசன் பேத்தி கல்யாணத்துக்குப் போனவர், லைட் மியூசிக் குழுவினருடன் மேடையேறி அசத்தி விட்டார். தன் அப்பா படத்தில் கண்ணதாசன் எழுதிய பாடல்களே அவரது
ஃபேவரிட்!

*  ‘‘கல்யாணத்துக்குப் பிறகு அம்மா, அண்ணின்னு வயசான கேரக்டருக்குத்தான் கால்ஷீட் கேட்பாங்க. இங்கதான் வித்தியாசப்பட்டு நிற்கிறார் இயக்குனர் குமரவேலன். எனக்கு கல்யாணம் ஆகப்போகுதுன்னு தெரிஞ்சும், ஹீரோயினா என்னை புக் பண்ணினார்’’ என ‘ஹரிதாஸ்’ படத்தில் தன்னை ஹீரோயின் ஆக்கிய டைரக்டரை வழிய வழிய வாழ்த்திக்கொண்டிருக்கிறார் சினேகா.

*  வைரமுத்துவின் பெசன்ட் நகர் வீட்டுக்குப் பக்கத்திலேயே ஒரு பார்க் இருக்கிறது. அவரே திறந்து வைத்த அந்த பூங்காவில் உட்கார்ந்துதான் பாடல்கள் எழுதுகிறார்.

*  வைரமுத்துவின் பெசன்ட் நகர் வீட்டுக்குப் பக்கத்திலேயே ஒரு பார்க் இருக்கிறது. அவரே திறந்து வைத்த அந்த பூங்காவில் உட்கார்ந்துதான் பாடல்கள் எழுதுகிறார்.

*  மியான்மர் விடுதலைப் போராளி ஆங் சான் சூ கியி சமீபத்தில் இந்தியா வந்தார். இளம் வயதில் தான் வாழ்ந்த வீட்டைப் பார்க்க ஆசைப்பட்டார் அவர். சூ கியியின் அம்மா இந்தியாவுக்கான மியான்மர் தூதராக இருந்தவர். அப்போது அவர்கள் வசித்த வீடு, டெல்லி அக்பர் ரோட்டில் இருக்கும் 24ம் நம்பர் வீடு. இப்போது அது காங்கிரஸ் கட்சியின் தலைமை அலுவலகமாக இருக்கிறது. அதனால் அங்கு போக சங்கடப்பட்டு தவிர்த்துவிட்டார்.

*  நடிகை எலிஸபெத் டெய்லர் வாழ்க்கை படமாகிறது. டெய்லராக நடிக்கப் போவது லிண்ட்ஸே லோகன். குடித்துவிட்டு வாகனம் ஓட்டியது, போதை வழக்கு, மறுவாழ்வு முகாம் அடைக்கலம் என 5 வருட சட்டப் பிரச்னைகளிலிருந்து மீண்டு வந்தவருக்கு வெயிட் ரோல். டெய்லர் இரண்டு முறை திருமணம் செய்து கொண்ட நடிகர் ரிச்சர்ட் பர்ட்டனுடனான உறவே படத்தின் கதை!

*  நாஞ்சில் நாடன் சமீபத்தில் அமெரிக்கா போய் திரும்பி இருக்கிறார். அவர் ஆற்றிய இலக்கிய உரைகளுக்கு அங்கு ஏகப்பட்ட ரெஸ்பான்ஸ்.



*  நாடகத்துக்கு ஆற்றிய சேவைக்காக பிரிட்டிஷ் மகாராணி விருது வாங்கியிருக்கிறார் ‘டைட்டானிக்’ நாயகி கேத் வின்ஸ்லெட். விருது விழாவில் அவர் அணிந்திருந்த பறவை இறகு போன்ற தொப்பிதான் இப்போது ஹாட் ஃபேஷன்! ஒரு மாதம் ஆனதாம் இதை உருவாக்க...

*  ‘வெற்றி’ நடிகரும் ‘அங்காடி’ நடிகையும் இன்னமும் நெருக்கமான டச்சில்தான் இருக்கிறார்கள். ‘‘உங்க ரெண்டு பேரையும் பார்த்தால் பிரசன்னா - சினேகா மாதிரி இருக்கு’’ என தோழிகள் உசுப்பேத்திவிடுகிறார்களாம் அங்காடியிடம்! இப்பொழுதெல்லாம் யதார்த்தமாக சந்தித்துக்கொள்வதுமாதிரி ‘என்ன இந்தப் பக்கம்’ எனக் கேட்டு இருவரும் சந்திக்கிறார்கள்.

*  விரல் வித்தை நடிகரும், குண்டு மும்பை நடிகையும் கோலிவுட்டின் லேட்டஸ்ட் பரபரப்பு ஜோடி ஆகியிருக்கிறார்கள். ஸ்டார் ஹோட்டல்களின் மொட்டை மாடியில் இருவரையும் சேர்ந்து பார்க்க முடிகிறது. ‘‘அந்தப் பொண்ணு முழிச்சுக்கிட்டே தூங்கிக்கிட்டு இருக்கா’’ என கரிசனம் உள்ளவர்கள் கேட்கிறார்கள்.

*  வாசனை நகைச்சுவை நடிகர், வருகிற எல்லாப் படங்களையும் ஒப்புக்கொண்டு, கால்ஷீட்டைப் பிரித்துத் தர முடியாமல் பாடாக படுத்துகிறாராம். அவரை அறிமுகப்படுத்திய நடிகருக்கே சமீபத்தில் டிமிக்கி கொடுத்ததாக தகவல். வீட்டிலிருந்து அவரைக் கிளப்பிக்கொண்டு வர தனிப்படையே வைத்திருக்கிறார்கள் தயாரிப்பாளர்கள்.