கல்யாண சதித்திட்டம்?





வன்முறையை கையில் எடுத்தவன் வன்முறையால்தான் சாவான். அதற்கு முன் கசாப்பை தூக்கிலிட்டது நியாயம்தான். அதிலும் பாரதிய ஜனதா கட்சியினரே பிரதமரைப் பாராட்ட வைத்த இந்த நடவடிக்கையை நாம் ஏற்கத்தான் வேண்டும்!
- இரா.கல்யாணசுந்தரம், மதுரை;
அ.சுகுமார், காட்டுக்கானூர்

வாழ்க்கை என்ற சாலை புதுகை சஞ்சீவியை புரட்டிப் போட்டாலும், ஆர்வம் என்ற ஆக்ஸிலேட்டரை முறுக்கி, முயற்சி என்ற கியர் போட்டுப் பறக்கும் அவருக்கு வெற்றி எனும் கஸ்டமர், மீட்டருக்கு மேல் போட்டுத்தர வாழ்த்துக்கள்!
- ம.அரங்கநாதன், புதுச்சத்திரம்;
காந்தி லெனின், திருச்சி.


பிரியாமணிக்கு நீங்களாவே மாப்பிள்ளை பார்த்து கல்யாணம் பண்ணி வைக்க சதித்திட்டம் வச்சிருக்கீங்களோ! பொண்ணு ஏங்குதுல்ல... நல்ல கதையாப் புடிச்சுக் கொடுங்கப்பூ!
- கரு.பாலகிருஷ்ணன், மதுரை.

குழந்தையின் விலை கேவலம் நூறு ரூபாயா? கேட்கவே அதிர்ச்சி! இப்படிப்பட்ட கள்ள உறவு சிக்கல்களைத் தவிர்க்க விதவை மறுமணங்களை அரசே நடத்தி வைக்க வேண்டும் என்பது நல்ல யோசனை. செய்யுமா அரசு?
- எஸ்.நாகராஜன், திருச்சி;
தி.தெ.மணிவண்ணன், அங்கலக்குறிச்சி.


‘அன்பே வா’, ‘எங்க வீட்டுப் பிள்ளை’, ‘முரட்டுக்காளை’, ‘சகலகலாவல்லவன்’ மாதிரி இப்போது படங்கள் வருவதில்லை என்னும் ரவிவர்மன், சூப்பர் இயக்குனராக மணிரத்னத்தை மெச்சுவது புதிரான முரண்தான்!
- எஸ்.சாந்தி, காட்பாடி.

ஒவ்வொரு நூற்றாண்டிலும் குழந்தைகளைப் பெற்றெடுக்க பெண்கள் என்ன பாடு பட்டிருக்கிறார்கள் என்று சிசேரியன் கட்டுரை உணரச் செய்தது. வர வர ‘ச்சீய் பக்கங்கள்’, ‘வாவ் பக்கங்கள்’ ஆகிக் கொண்டே வருகிறது.
- என்.வி.சீனிவாசன், சென்னை-63.

ஹெலிகாப்டரில் இருந்தே குதிக்கப் பயப்படாதவர் தல. விஷ்ணுவர்த்தன் படத்தில் தலைகீழா தொங்கவா தயங்கப் போகிறார்?
- எம்.மிக்கேல்ராஜ், சாத்தூர்.

ஒரு விளக்கம்
கடந்த 3-12-2012 இதழில் நடிகர் ராணா பேட்டி வெளியாகி இருந்தது. அதன் தலைப்பில் ‘த்ரிஷாவின் பாய் ஃபிரண்ட்’ என்று அவர் குறிப்பிடப்பட்டிருப்பது ரசிக்கத்தக்கதாக இல்லை என ராணா தெரிவித்திருக்கிறார். மேலும், ‘‘நயன்தாரா பற்றி ‘கிருஷ்ணம் வந்தே ஜெகத்குரும்’ படத்தில் உடன் நடித்த சக நடிகை என்ற அளவிலேயே கருத்து தெரிவித்திருந்தேன். ஆனால் ‘நயன்தாராவைப் புகழும் த்ரிஷா பாய் ஃபிரண்ட்’ என்ற தலைப்பு, அவரையும் த்ரிஷாவையும் ஒப்பிடுவது போன்ற ஒரு தோற்றத்தை உருவாக்கிவிட்டது. நயன்தாரா மற்றும் த்ரிஷா பற்றி தனிப்பட்ட கருத்துகள் எதுவும் தெரிவிக்காத நிலையில், இப்படிப்பட்ட தலைப்பு சக கலைஞர்களை புண்படுத்துவதாக அமையும்’’ என்கிறார் அவர். யாரையும் புண்படுத்துவதற்கோ, உள்நோக்கத்துடனோ அந்த பேட்டி வெளியிடப்படவில்லை.