கவிதைக்காரர்கள் வீதி





விலகிச் செல்
    சொல்ல முடிவதில்லை
    தொடரும் நிழல்

யார் வருவார்கள்?
    காகம் கரைகிறது
    அனாதை இல்லம்

என்ன செய்தன?
    ஆயுள் தண்டனை
    தொட்டி மீன்கள்

வெறும்
    மணல் பரவியிருக்கும்
    ஆற்றுக்கு
    இவ்வளவு பெரிய பாலம்
    ஏன் கட்டி வைத்திருக்கிறார்கள்
    என்ற மகளின் கேள்விக்கு
    இன்றுவரை
    பதில் சொல்லத் தெரியவில்லை

ஜன்னலோர பயணம்
    சிகை கோதும் காற்று
    நினைவில் பாட்டி

எதை வைத்துச் சொல்ல,
    மழை பெய்யும் என்று?
    தும்பிகளற்ற வானம்
பாலு விஜயன்