கவிதைக்காரர்கள் வீதி




* எந்தவொரு சிக்னலிலும்
நிற்பதேயில்லை காலம்!

* குழந்தைகளை
நனைக்கும் மழை,
கடவுள் சிந்தும்
முத்தங்களோ!

* மழையின்
முதல் ரசிகரோ
ஒவ்வொரு குடையும்!

* விபத்துக்குள்ளான
மணல் லாரி,
ஆற்றின் சாபமோ?

* நடவு வயல்களை
காவல் புரிந்த பொம்மை
இனி யார் பாதுகாப்பது
வீட்டு மனைகளான பின்பு?

* திருவிழாவில்
தொலைந்த குழந்தை
கடவுளுக்குத்தான்
எத்தனை அவப்பெயர்!

* குழந்தை அள்ளிய
உள்ளங்கை நீரில்
வழிந்தோடுகிறது வானம்!

* அன்று கதிரடித்த இடத்தில்
இன்று சிக்ஸர் அடிக்கிறான்
பேரன்

பெ.பாண்டியன்