டாக்டர் எனக்கொரு டவுட்டு!



எவ்ளோ....... மாத்திரை!

நீரிழிவு, ரத்த அழுத்தம், கொலஸ்ட்ரால்... இப்படிப் பல விஷயங்களுக்காகவும் ஒருவர் மருந்து
எடுத்துக் கொள்ளும்போது, அதிகப்படியான
மருந்துகளால் அவருக்கு பாதிப்பு வருமா?
- டி.சந்திரசேகரன், மதுரை

ஐயம் தீர்க்கிறார் இன்டர்னல் மெடிசினுக்கான சிறப்பு மருத்துவர் கார்த்திக்.‘‘ஒருவர் ஒன்றுக்கு மேற்பட்ட பிரச்னைகளுக்கு மருந்துகள் எடுத்துக்கொள்ளும் போது முழுக்க டாக்டரின் ஆலோ
சனையின் படியே எடுத்துக்கொள்ள வேண்டும். மாத்திரைகள் எப்போது, எந்த அளவு எடுத்துக்கொள்ள வேண்டும், எத்தனை நாட்கள் தொடர வேண்டும் என்று நாங்கள் குறித்துக் கொடுக்கும் அளவையே பின்பற்ற வேண்டும். நீரிழிவுக்காக எடுக்கும் மாத்திரைகளும் ரத்த அழுத்தத்துக்கு சாப்பிடும் மாத்திரைகளும் ஒன்றாக டோஸ் தெரியாமல் சாப்பிட்டால் பக்க விளைவுகளைஏற்படுத்தும். இதை Drug interactions என்று சொல்வோம்.

 பல மாத்திரைகளை ஒரே நாளில் எடுக்க வேண்டியவர்கள் பக்க விளைவு கள் ஏற்படாமல் பார்த்துக்கொள்வது முக்கியம். கொலஸ்ட்ராலுக்கு மருந்துகள் எடுப்பவர்கள் கல்லீரல் பரிசோதனை அவ்வப்போது செய்து கொள்வது நல்லது. அதே போல கொலஸ்ட்ராலுக்கு மருந்துகள் எடுப்பவர்களுக்கு குடிப்பழக்கம் இருந்தால் விட்டு விடவேண்டும். இல்லாவிட்டால் கல்லீரல் பாதிப்புக்கு வழிவகுக்கும்.

ரத்த அழுத்தத்துக்கு மாத்திரைகள் எடுப்பவர்கள் உடலில் சோடியம், பொட்டாசியம், ஃப்ளூரைடு, யூரியா, கிரியாட்டினைன் அளவுகள் சரியான அளவில் உள்ளதா என்பதை ஆறு மாதங் களுக்கு ஒருமுறை ரத்தப் பரிசோதனை செய்து பார்த்துக்கொள்ள வேண்டும். நிறைய மாத்திரை எடுப்பவர்கள் சிறுநீரகங்கள்  சரியாகஇயங்குகிறதா என்பதையும் பரி
சோதிக்க வேண்டும்.

முன்னரேஇவ்வாறு பரிசோதனை செய்வதால் நோய்கள் வரும் முன் தடுக்க முடியும்.சிலர் உடல்நல பிரச்னைகளுக்குடாக்டரை அணுகாமல்  மருந்துக் கடைகளை அணுகி மாத்திரைகள் வாங்கி சாப்பிடுவார்கள். இது மிகவும்  தவறான அணுகுமுறை. டாக்டர் ஃபீஸ் மிச்சமாகும் என நினைத்து இப்படிச் செய்தால் பிறகு பெரிய செலவுகளை அவர்களுக்கு ஏற்படுத்தும். வெளிநாடுகளில் டாக்டரின் ப்ரிஸ்கிரிப்ஷன் இல்லாமல் எந்த மருந்துகளையும் வாங்க முடியாது. அதனால் அவர்கள் தேவையில்லாமல் மருத்துகளை எடுத்துக் கொள்ள முடியாது. அங்கு பார்மஸி படித்தவர்கள் மட்டுமே மருந்துக் கடைகளில் இருக்கிறார்கள்.

இங்கு அதிகம் படிக்காதவர்களே மருந்துக் கடைகளில் இருக்கிறார்கள். டைகுளோபினக் என்னும் மாத்திரையை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் சிறுநீரகங்கள் செயலிழக்கும். நீரிழிவுக்கு கொடுக்கும்மாத்திரைகள் சிலவற்றை டோஸ் அதிகமாக எடுத்தால் நீர்ப்பையில் புற்றுநோயைஏற்படுத்தும். நீரிழிவுக்கான சில மாத்திரை களை இதய நோயாளிகளுக்கு கொடுக்கக்கூடாது. ஆகவே முறையான டாக்டரின் அறிவுரைகளை பின்பற்றுவது நல்லது.

ஒரே நாளில் பல மாத்திரைகளைசாப்பிட வேண்டிய கட்டாயத்தில்உள்ளவர்கள் ‘டேப்ளட் பாக்ஸ்’ என்ற மாத்திரைகளுக்கான பெட்டியை வாங்கி வைத்துக்கொள்வது நல்லது. அதில் எந்த வேளைக்கு எத்தனை மாத்திரைகள் என பிரித்து எடுத்து வைத்துக்கொள்ளலாம் குழப்பம் நேராது. ஒரு செவிலியின் மேற்பார்வையில் எடுத்துக்கொண்டால் இன்னும் நல்லது.’’‘‘நீரிழிவுக்கு கொடுக்கும்மாத்திரைகள் சிலவற்றை டோஸ் அதிகமாக எடுத்தால் நீர்ப்பையில் புற்றுநோயை ஏற்படுத்தும்.’’

சேரக்கதிர்
படம்: ஆர்.கோபால்