புதிய பாதையில் சிம்ரன்!



திருமணம் முடிந்த கையோடு சினிமாவுக்கு டாட்டா காட்டிய சிம்ரன், இப்போது ரீ-என்ட்ரி கொடுத்திருக்கிறார். எப்படி? தயாரிப்பாளராகவும் இயக்குனராகவும் அவதாரம் எடுத்துள்ளார். ‘சிம்ரன் அன்ட் சன்ஸ்’ என்பதுதான் தயாரிப்பு நிறுவனத்தின் பெயர். “என்னுடைய வாழ்க்கையில் சினிமா முக்கிய இடத்தை எடுத்துக் கொண்டது. என் கணவர் தீபக்குடன் இணைந்து தயாரிப்பு கம்பெனி ஆரம்பிக்க அதுவே காரணமாய் இருந்தது.

என்னுடைய நடிப்பு அனுபவமும், சின்னத்திரை நிகழ்ச்சிகளைத் தயாரித்த அனுபவமும் எனது இந்த முயற்சிக்கு உறுதுணையாக இருந்தது. இந்த வருடம் இரண்டு படங்களைத் தயாரிக்க திட்டமிட்டுள்ளேன். சினிமாவை அடுத்த தளத்துக்கு அழைத்துச் செல்லும் விதமாக புதுப்புது திறமைசாலிகளை அறிமுகப்படுத்துவேன். என்னுடைய முயற்சியை அனைவரும் ஆதரிப்பார்கள் என்ற நம்பிக்கை இருக்கிறது” என்கிறார் சிம்ரன்.

-ரா