கலகலப்பான மரணக்கதை!



தமிழ் சினிமாவில் இப்போது அதிர்ஷ்டக்காத்து  சமந்தா, காஜல் போன்ற பெரிய நடிகைகள் மீது வீசினாலும், லீமா போன்ற வளரும் நடிகைகள் மீதும் வீசத்தான் செய்கிறது. ‘மாங்கா’, ‘சூறகாத்து’ என நாலைந்து படங்களில் நடித்துவரும் லீமாவுக்கு ‘சூறகாத்து’ திருப்புமுனையாக இருக்கும் என்கிறார் அதன் இயக்குனர் சரவண சக்தி. இவர் ரித்திஷ் நாயகனாக நடித்த ‘நாயகன்’ படத்தை இயக்கியவர்.

ஒரு கிராமத்தில் மர்மமான முறை யில் சிலர் இறக்கின்றனர். ஊர்மக்கள் அதை பேயின் வேலை என்று நினைக்கிறார்கள். ஆனால் நாயகனுக்கு மட்டும் அந்த மரணங்கள் மீது சந்தேகம் ஏற்படுகிறது. சந்தேகத்தைத் தீர்த்துக் கொள்ள நாயகன் புறப்படும் போது சந்திக்கும் பிரச்னைகளை கலகலப்பாக சொல்லியிருக்கிறார்களாம். நாயகனாக நந்தகுமார் நடித்திருக்கிறார். படத்தின் தயாரிப்பாளரும் இவரே என்பதால் செலவைப்பற்றிக் கவலைப்படாமல் பிரமாண்டமாக எடுத்திருக்கிறாராம்.

-ரா