முதலிரவு என்பது போராட்டமா?



சரோஜாதேவி பதில்கள்

* பெண்கள் உதட்டை கடிப்பது ஏன்?
- எஸ்.அர்ஷத் ஃபயாஸ், குடியாத்தம்
இனிப்பை எறும்பு கடிப்பது இயல்புதான்.

* நீச்சல் உடை கண்டுபிடிக்கப்படாமல் இருந்திருந்தால்?
- த.சத்தியநாராயணன், அயன்புரம்.
ஓவராக கற்பனைக் குதிரையைத் தட்டிவிட வேண்டாம். வேறு ஏதாவது உடை உடுத்தி நீச்சலடித்திருப்போம்.

* அங்கத்தில் அழகு ஒளிந்திருக்கும் இடம் எது?
- சங்கீத சரவணன், மயிலாடுதுறை.
கண்காட்சி ஆகாத இடமெல்லாம் அழகு கொட்டிக் கிடக்கும் சுரங்கம்தான்.

* காதலிக்கு முத்தம் கசப்பது எப்போது?
- வண்ணை கணேசன், பொன்னியம்மன்மேடு.
காதலன், திருட்டு ‘தம்’ அடித்துவிட்டு வரும்போது.

* ‘முதலிரவு என்பது போராட்டங்கள் நிறைந்தது’ என்கிறாரே சன்னி லியோன்?
- ப.முரளி, சேலம்.
போராட்டமே மகிழ்ச்சி.