51 இன் ஒன் மாங்காய் மரம்!
- ரோனி
மஸ்கட்டிலிருந்து மகாராஷ்டிராவின் விதர்பா பகுதியிலுள்ள வாஷிம் என்ற தன் சொந்த கிராமத்துக்கு 2001ம் ஆண்டு திரும்பிய ரவி மார்செட்வாருக்கு புத்தி பிசகிவிட்டதா என்றுதான் அவரின் குடும்பம் உட்பட சொந்தங்களும் நினைத்தார்கள். பின்னே? பத்து ஆண்டுகள் எஞ்சினியராக வேலை செய்தவர், திடீரென தங்களின் 5 ஏக்கர் நிலத்தில் விவசாயம் செய்யப்போகிறேன் என அறிவித்தால்..? தன் தந்தையின் சமூகசெயல்களை சாம்பிளாக எடுத்துக் கொண்டு, நம்பிக்கையுடன் தன் நிலத்தில் மாமரங்களை விவசாயம் செய்து சாதித்திருக்கிறார்.
 ஆம். ஐம்பது வயதான மரத்தில் 51 வெரைட்டிகளை விளைவித்து 51 இன் ஒன்னாக மாமரத்தை மாற்றி, சீசனில் கிடைக்கும் ஆயிரம் ரூபாய் வருமானத்தை ரூ.30 ஆயிரமாக மாற்றியதில் இருக்கிறது மகேஷின் ஸ்மார்ட் புத்தி. கிர் மாடுகளை வளர்ப்பது, ஜீரோ பட்ஜெட் விஞ்ஞானி சுபாஷ் பாலேகரின் விவசாயமுறையை பின்பற்றியது மற்றும் அரசு திட்டங்களை அலைந்து சேகரித்தது என தன் ஊருக்கே நல்லவழியை காட்டியிருக்கிறார்!
|