ஸ்மார்ட் க்யூட்டி!



ஸ்மார்ட் க்யூட்டி!

- ரீடர்ஸ் வாய்ஸ்

சாதிக்க வயது தடையில்லை என்பதற்கு நிர்பய் தாக்கூர் சூப்பர் எக்சாம்பிள்.
- அர்ஷத் ஃபயாஸ், குடியாத்தம்.

பெண்கள் கிரிக்கெட் டீமின் கேப்டன் மித்தாலி ராஜை மிராக்கிள் என்றுதான் சொல்லவேண்டும். பெண் கிரிக்கெட்டின் ஹிஸ்டரியை சொன்ன கட்டுரை சூப்பர்.
- ஆனி அஞ்சலின், விநாயகபுரம்; த.சத்தியநாராயணன், சென்னை; மயிலை கோபி, அசோக்நகர்; சண்முகராஜ், சென்னை; நவீன்சுந்தர், திருச்சி; மாணிக்கவாசகம், கும்பகோணம். 

ஏழைமக்களின் வயிறு காயாமல் காத்த ரேஷன்கடைகளை மூடுவது வெந்த புண்ணில் வேல் பாய்ச்சும் வேலை. மத்திய அரசின் ரேஷன் கடை மூடும் அடாவடித்தனத்தை சுட்டிக்காட்டிய குங்குமத்திற்கு சபாஷ்!
- ஆர்.சண்முகராஜ், சென்னை;

வண்ணை கணேசன், பொன்னியம்மன்மேடு; அர்ஷத் ஃபயாஸ், குடியாத்தம்;
இரா.வளையாபதி, தோட்டக்குறிச்சி;

ஃபேஷன் உலகின் குட்டிச்சுட்டி ஸ்மார்ட் க்யூட்டி!
- பூதலிங்கம், நாகர்கோவில்; லட்சுமிநாராயணன், வடலூர்.

ஆசிட்டால் வாழ்க்கை இழந்தது ரிதுராய் போல எத்தனை பெண்களோ, படிக்கும்போது நெஞ்சம் கனக்கிறது.
- தா.சைமன்தேவா, விநாயகபுரம்.

‘காலச்சுவடு கண்ண’னின் பேட்டியில் அவரது ஆழமான பதிப்பு அனுபவத்தையும், இலக்கியச்சுவையையும் இனிதே பதிந்த முதிர்ந்த பேச்சு அருமை. கரிச்சான் குஞ்சு, க.நா.சு போன்ற மூத்த எழுத்தாளர்களின் நூல்களை அற்புதமான டிசைனில் பதிப்பித்து வழங்கும் காலச்சுவடு இலக்கியத்திற்கு காமதேனுதான்.
- லட்சுமி நாராயணன், வடலூர்; கே.எஸ்.குமார், விழுப்புரம்; பி.மாணிக்கவாசகம், கும்பகோணம்.

வியாசர்பாடியில் புதிய கால்பந்து வீரர்களை உருவாக்கி வரும் தங்கராஜ், உமாபதி, சுரேஷ் பாராட்டுக்குரியவர்கள்.  
- கே.எஸ்.குமார், விழுப்புரம்; சைமன்தேவா, விநாயகபுரம்; த.சத்தியநாராயணன், சென்னை; சிம்மவாஹினி, வியாசர்பாடி.

மின்சாரம் இல்லாமலேயே ஃபிரிட்ஜா... அசத்துகிறார் டெல்லியின் இளம் விஞ்ஞானி தீக்‌ஷிதா குல்லர்.
- பூதலிங்கம், நாகர்கோவில்.  

‘பேரழகியின் புகைப்படம்’ என்ற நாராயணி கண்ணகி சிறுகதை பசுமரத்து ஆணியாய் நெஞ்சில் பதிந்தது.
- கொ.சி.சேகர், பெங்களூரு.

காஷ்மீரின் நகரிலுள்ள உல்கர் நதியை தூய்மை செய்யும் இளைஞர் பிலால் அகமதுவின் அரிய பணி போற்றப்படவேண்டியது அவசியம்.
- சண்முகராஜ், சென்னை.

காதல் இவ்வளவு வீரியமானதா என பீதிகொள்ள வைத்தது ‘காசு வேண்டாம் காதல் போதும்’ ஸ்டோரி.
- மயிலை கோபி, அசோக்நகர்.

‘கவிதை வன’த்தில் சந்தேகம், அதிசயம் என்ற இரு கவிதைகளும் அருமை.
- சேவுகப்பெருமாள், பெருமகளூர்.

உயிரைக் குடிக்கும் ப்ளூவேல் பூதம் பற்றி முன்னதாகவே வார்னிங் தந்திருப்பது குங்குமத்தின் அக்மார்க் சமுதாய அக்கறை.
- இரா.கல்யாணசுந்தரம், அனுப்பானடி; வள்ளிகுமாரசாமி, அசோக்நகர்; மாணிக்கவாசகம், கும்பகோணம்; மனோகர், கோவை.

அட்டையில்: அதிதி
படம்: ஆண்டன் தாஸ்