சில்லறை பழிக்குப்பழி!



குஜராத்தைச் சேர்ந்த ஒருவர், விவாகரத்தான மனைவிக்குத் தரவேண்டிய தொகை சில மாதங்களாக நிலுவையில் இருந்துள்ளது. அதாவது  ரூ.50 ஆயிரம்.

இதில் ரூ.25 ஆயிரத்தை முதல் தவணையாக கோர்ட்டில் அளிக்க ஒப்புக்கொண்டார். பதினாறாயிரம் ரூபாயை பத்து ரூபாய், ஐந்து ரூபாய்  என சில்லறைகளாக மாற்றிவந்து கொட்டி மனைவியைத் திகைக்க வைத்துள்ளார். மீதி ரூ.9 ஆயிரத்தை நோட்டாகக் கொடுத்துள்ளார்.  அதிர்ந்து போன மனைவி இதை ஏற்க மறுத்தார். “நான் உழைத்து சம்பாதித்ததை ஏன் மறுக்கிறீர்கள்?” என்று வாதிட்டு கோர்ட்டையும்  ஒப்புக்கொள்ள வைத்து, விடாப்பிடியாக மனைவியை ஒருமணி நேரத்துக்கும் மேலாக சில்லறைகளை எண்ண வைத்து நூதனமாகப்  பழிவாங்கியுள்ளார்!

தொகுப்பு: ரோனி