டுவிட்டரிலும் சாதித்த விராட் கோலி!



கிரிக்கெட் மைதானத்தில் அடிக்கடி சாதனைகளைப் படைத்து வைரலாவது விராட் கோலியின் வழக்கம். இப்போது கிரிக்கெட்டைத் தாண்டி சமூக வலைத்தளங்களிலும் சாதனை படைத்துள்ளார்.அதாவது டுவிட்டர் சமூக வலைத்தளப் பக்கத்தில் 5 கோடிப் பேரால் பின்பற்றப்படும் விளையாட்டு நட்சத்திரமாக உருவெடுத்துள்ளார்.
 இதுவே அவரது புதிய சாதனை.இதன்மூலம் அதிகம் பேரால் பின்தொடரப்படும் மூன்றாவது விளையாட்டு வீரர் என்ற சாதனையை விராட் கோலி பெற்றுள்ளார்.

விராட் கோலிக்கு முன்னதாக பிரபல கால்பந்து வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோவை 10.3 கோடி ரசிகர்களும்; பிரபல கூடைப்பந்து வீரர் லெப்ரான் ஜேம்ஸை 5.2 கோடி ரசிகர்களும் டுவிட்டரில் பின்தொடர்ந்து வருகிறார்கள்.

டுவிட்டர் தளத்தில் மட்டுமின்றி இன்ஸ்டாகிராம், ஃபேஸ்புக் ஆகிய சமூக வலைத்தள பக்கங்களிலும் அதிகம் பேர் விராட் கோலியைப் பின்தொடர்கிறார்கள்.
இதில் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் 20 கோடிப் பேர் விராட் கோலியைப் பின்தொடர்கிறார்கள். இதன்மூலம் சர்வதேச கிரிக்கெட் வீரர்களிலேயே அதிகம் பேரால் பின்பற்றப்படுபவர் என்ற பெருமையை அவர் பெற்றுள்ளார்.

காம்ஸ் பாப்பா