இந்தியாவை கண்காணிக்க 52 ஜோடிக் கண்கள்!



பஹல்காம்தான் காரணம். அதுவே இத்தலைப்புக்கு அடிப்படை.யெஸ். ஆபரேஷன் சிந்​தூர் நடவடிக்கை எடுக்​கப்​பட்ட பிறகு, இந்​திய எல்​லைகளைக் கண்​காணிக்க 52 செயற்​கைக் கோள்​களை ஏவும் பணியை தீவிரப்​படுத்த மத்திய அரசு திட்​ட​மிட்​டுள்​ளது.
காஷ்மீரில் உள்ள பஹல்​காமில் தீவிர​வா​தி​கள் நடத்​திய தாக்​குதலுக்கு பதிலடி கொடுக்க பாகிஸ்​தானுக்கு எதி​ராக ஆபரேஷன் சிந்​தூர் தாக்​குதலை மத்திய அரசு நடத்​தி​யது. இந்​நிலை​யில், இந்​திய எல்​லைகள் மற்​றும் எதிரி நாடு​களின் நிலப்​பரப்​பு​களை தொடர்ந்து கண்​காணிக்​க​ 52 கண்​காணிப்பு செயற்​கைக் கோள்​களை விண்ணில் ஏவும் பணியை மத்​திய அரசு தீவிரப்​படுத்தி உள்​ளது.

இந்தத் திட்​டத்தை மத்திய அரசு கடந்த ஆண்டே முடிவுசெய்துவிட்டதாம். இப்பொழுது அது அமலுக்கு வரப்போகிறது.அத்துடன் ராணுவத்​துக்​காக மட்​டும் பிரத்யேகமாக விண்​வெளிக் கொள்கையை கொண்டு வரவும் மத்​திய அரசு முடிவு செய்​துள்ளது. 

அதன்படி விண்ணில் இருந்து கண்காணிக்கும். 3ம் கட்ட திட்டத்துக்கு கடந்த ஆண்டு அக்​டோபர் மாதம் பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்​சரவை கூட்டத்தில் ஒப்​புதல் வழங்​கப்​பட்டுவிட்டதாக செய்திகள் சொல்கின்றன.

இந்தத்திட்டம் ரூ.26,968 கோடி செல​வில் செயல்படுத்தப்பட உள்ளது. இதில் 21 செயற்​கைக் கோள்​கள் தயாரிப்பு மற்​றும் விண்​ணில் ஏவும் பணியை இஸ்ரோவும், 31 செயற்கைக் கோள்​கள்தயாரிப்பு மற்​றும் விண்​ணில் ஏவும் பணியை தனியார் நிறு​வனங்​களும் மேற்​கொள்​ளும்.அடுத்த ஆண்டு ஏப்​ரல் மாதத்​துக்​குள் முதல் கட்​டமாக சில கண்​காணிப்பு செயற்​கைக் கோள்​கள் விண்​ணில் ஏவப்​படும். 

வரும் 2029ம் ஆண்​டுக்​குள் மொத்தம் 52 செயற்​கைக் கோள்​களும் விண்​ணில் ஏவப்​பட்டு விடும். இதற்​கான பணிகளை மத்திய அரசு தீவிரப்​படுத்தி உள்​ளது. மேலும், செயற்​கைக்கோள் ஏவும் ஒப்​பந்​தத்​தைப் பெற்​றுள்ள 3 தனி​யார் நிறு​வனங்​கள், தங்​கள் பணி​களை விரைவுபடுத்த மத்​திய அரசு உத்​தர​விட்டுள்​ளது.

இந்திய கண்​காணிப்பு செயற்​கைக் கோள்​கள் விண்ணில் ஏவப்​பட்ட பிறகு, சீனா, பாகிஸ்தானின் நிலப்​பரப்பு மற்​றும் இந்திய பெருங்​கடல் பகு​தி​களை தொடர்ந்து 24 மணி நேர​மும் துல்​லிய​மாக கண்​காணிக்க முடி​யும். 

பாகிஸ்தானுக்கு எதிராக ஆபரேஷன் சிந்​தூர் தாக்​குதலின் போது, இந்​தி​யா​வின் கார்டோசேட் செயற்​கைக்கோள் மிக முக்​கிய பங்கு வகித்​தது. பாகிஸ்தானில் ராணுவத்​தின் நடமாட்​டங்​களை இந்த செயற்​கைக்கோள் கண்டறிந்து இந்திய பாது​காப்​புப்​ படைகளுக்​கு வழங்​கியது குறிப்​பிடத்​தக்​கது.

ஜான்சி