கும்தலக்கடி கும்மாவா இலக்கிய விருதுகள் 2025!



அமெரிக்க அதிபர் டிரம்ப் பார்வையில் படும் வரை இதை ஷேர் செய்யுங்க

இலக்கியத்துக்கான நோபல் பரிசு வாங்க முடியாத தமிழ் இலக்கியவாதிகளுக்காகவே இந்த கும்தலக்கடி விருது அமெரிக்காவில் வழங்கப்படவிருக்கின்றன!அரிதிலும் அரிதான இந்த இலக்கிய விருதுக்கான சரியான பயனாளியை கண்டறியும் கடினமான பணியில் ஆசிரியர் குழு இறங்கியுள்ளது.
2025க்கான விருதுப் பட்டியலில் இடம் பெற விரும்பும் எழுத்தாளர்கள், கவிஞர்கள் தங்களைப் பற்றிய சிறு அறிமுகத்தோடு இரண்டு கலர் போட்டோவும் (AI படங்கள் நிராகரிக்கப்படும்) இணைத்து விண்ணப்பிக்கக் கோருகிறோம். 

தகுதி:

1. எதாவது எழுதியிருக்க வேண்டும். கவிதை என்றால் இறுதியில் இது கவிதை என்று குறிப்பு அல்லது பெயர், தேதி, நேரம் இடம் பெற்றிருக்க 
வேண்டும்

2. விருது அமெரிக்காவில் அடுத்த வருடம் வழங்கப்படும். தேதி விசா கிடைப்பதை பொருத்தது. விசாவுக்கான பேப்பர்கள் அனுப்பப்படும். ஆனால், அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவித்துள்ள புதிய விதிமுறைகளின் கீழ் கான்ஸலேட்டுக்கு முறையாக விண்ணப்பித்து விசா பெறுவது படைப்பாளியின் பொறுப்பு.

3. அமெரிக்காவில் உணவு, உறைவிடம், உள்ளூர் பயணம், ஊர் சுற்றிக் காண்பிக்கும் கைடு வேலை கமிட்டி பொறுப்பு. அமெரிக்கா வந்து போக விமான டிக்கெட் மட்டுமே படைப்பாளியின் பொறுப்பு. 

4. காரில் ஊர் சுற்ற முடியாது. ஆர்.வி வேண்டும் என்றால் கட்டணம் தனி. வீட்டில் இருக்கும் போது தமிழக உணவு ஏற்பாடு செய்யப்படும். வெளியூர் போனால் கிடைப்பதை அட்ஜெஸ்ட் செய்து கொள்ள வேண்டும். ப்ரெஷ்ஷாக இரவில் திருடிய ஆட்டுக்கறி கிடைக்காது.

5. தெருவோரம் மூச்சா போக வசதியில்லை. நடுரோட்டில் கயித்துக் கட்டில் போட்டு படுக்க வசதியில்லை. இப்படி பல இல்லைகள். மனதை அதற்கேற்ப தயார் செய்து கொண்டு வரவும். அதை விட்டுவிட்டு திரும்பி ஊருக்குப் போய், ‘அமெரிக்காவில் வாகனங்கள் எல்லாம் வலது பக்கம் பயணிக்கிறது, எனக்கு தலையே சுற்றிவிட்டது’ என்று காலட்சேபம் செய்யக் கூடாது.

6. விருதுப் பணம் (பொற்கிழி) எவ்வளவு வேண்டும் என்பதை படைப்பாளியே முடிவு செய்து கொள்ளலாம். அந்தத் தொகையை விமானம் ஏறும் முன்பே கமிட்டி அக்கவுண்டுக்கு ஆன்லைனில் அனுப்பி விட வேண்டும்

7. ஒரு முக்கிய கொள்கை முடிவு காரணமாக தற்போதைக்கு 20 - 43 வயதுக்குட்பட்ட இளம் பெண் படைப்பாளிகளை மட்டுமே கவுரவிக்க கமிட்டி முடிவு செய்திருக்கிறது. எனவே எந்த வயது ஆண் படைப்பாளிகளும் விண்ணப்பிக்க வேண்டாம். 

8. படைப்பாளி தேர்வு முழுக்க முழுக்க கமிட்டியின் முடிவு. படைப்பே எழுதாத ரீல்ஸ் மட்டுமே போட்ட படைப்பாளிக்கு விருது வழங்கியது ஏன்... ரீல்ஸில் ஆடும் பெண்ணின் கண்கள் ஆயிரம் கவிதைக்கு சமம் என்று கமிட்டி நினைத்தால் போதுமா... ஒத்தை ஆள் எப்படி கமிட்டி என்று அழைத்துக்கொள்ளலாம்... என்றெல்லாம் கேட்க யாருக்கும் உரிமையில்லை. கேட்பவர்கள் மீது அவதூறு வழக்கு பதியப்படும். 

இப்படிக்கு கும்தலக்கடி கும்மாவாகமிட்டி / அட்மின்.

முகமூடி