ரூல்ஸ்





‘‘ஐயோ அம்மா!’’ - ஹோம் ஒர்க் முடிக்காததற்காக சௌந்தர்யா டீச்சர் பிரம்பால் அடித்தபோது, இப்படித்தான் அலறிவிட்டாள் எட்டாம் வகுப்பு மாணவி அபிதா.

அந்தத் தனியார் மெட்ரிக் பள்ளி வளாகத்துக்குள் ப்ரீ கே.ஜி.யில் சேர்ந்த நாள்முதலே ஆங்கிலத்தில்தான் பேச வேண்டும். யாரும் தமிழில் பேசக் கூடாது. அனிதா அலறிவிட்டாள்.

இப்போது என்ன செய்ய?
‘‘அனிதா, ஆஸ் பர் அவர் ஸ்கூல் ரூல்ஸ், நோபடி ஷுட் ஸ்பீக் இன் டமில். ஐ திங்க் யூ நோ த பனிஷ்மென்ட் ஃபார் தட்!’’
‘‘யெஸ் மேடம்... ஹண்ட்
ரெட் ருபீஸ் ஃபைன்...’’
‘‘யெஸ்... டுமாரோ யூ ஷுட் பே த ஃபைன்.’’
‘‘ஓகே... மேம்...’’ என்ற அபிதா உட்கார்ந்தாள்.

விதிகளை மீறி யாராவது தமிழில் பேசினால் இப்படித்தான் அந்தப் பள்ளியில் நூறு ரூபாய் ஃபைன் பிடுங்குவார்கள்.

அபிதாவிடம் பேசிவிட்டு தன் இருக்கைக்குப் போக வேகமாகத் திரும்பினாள் சௌந்தர்யா டீச்சர். வழியில் இருந்த பெஞ்சின்
கால்பகுதி நீண்டிருக்க... அதில் இடித்துக் கொண்டவள், வலி தாங்காமல், தன்னையும் அறியாமல் கத்தினாள்... ‘‘ஐயோ, அம்மா!’’