நமீபாவம்





படபடவென்று பொரிந்து தள்ளிய பாரதிராஜாவின் அனல் பறக்கும் பேட்டி, தீபாவளி சமயத்தில் வந்த தௌசண்ட் வாலா சரவெடிதான் போங்கள்! பல உண்மைகளை அவர் வெளிச்சம்  போட்டுக் காட்டியது சூப்பர்!
- த.சத்தியநாராயணன், அயன்புரம்; அ.முரளிதரன், மதுரை-3.

ராணி முகர்ஜி, வாழ்வின் நெளிவு சுளிவுகளை நுட்பமாகவே தெரிந்து வைத்திருக்கிறார். ஆனால், அவர் கோபப்படுவதைப் பார்க்கும்போது, ஒருவேளை ‘பொய்யர்கள்’ கூறுவது தான்  உண்மையோ என்ற சந்தேகம் எழாமல் இல்லை!
- ஆர்.கே.லிங்கேசன், மேலகிருஷ்ணன்புதூர்.

செவ்வாய்க்கு ராக்கெட் விடுவோம் என்று பேசிக்கொண்டிருக்கும் நம் நாட்டில், சேலம் மாவட்டத்து மலை கிராம மக்கள் இன்னும் ரயிலையே பார்த்ததில்லை என்பது அவமானகரமானது!
- எஸ்.மல்லிகா ராஜன், காஞ்சிபுரம்.

ஏதோ ஒரு மூடில் ஜப்பான்காரங்க நமீதாவை ‘இந்தியன் பியூட்டி’ என்றது தப்புதான். அதற்காக சாரு நிவேதிதா குரங்குகள் தீவையும் நமீதாவையும் ஒப்பிடுவதெல்லாம் ஓவர். நமீ பாவம்  இல்லையா? அகில இந்திய நமீதா பேரவை சார்பாக சாருவை நாங்கள் வன்மையாகக் கண்டிக்கிறோம்!
- எஸ்.டி. சுந்தரராஜன், கடலூர்;மயிலை கோபி, சென்னை-83.

அருணாசலப் பிரதேசத்துக்கே சென்று வந்த எஃபெக்ட்டைக் கொடுக்கிறது ‘வடகிழக்கு வசந்தம்’.
- எஸ்.கோபாலன், நங்கநல்லூர்; கே.பி.வைரவன், நாகை; தி.தெ.மணிவண்ணன், அங்கலக்குறிச்சி.

கல்லும் மண்ணும் எல்லா ஏரியாவிலும் கிடைக்கும். ஆனால், ஷாஜகானின் காதல் ஆக்ராவில் மட்டும்தாங்க கலந்திருக்கும். துபாய் நாட்டு டூப்ளிகேட் தாஜ்மகால், நம்ம ஒரிஜினலுக்கு  நிகராகுமா சொல்லுங்க?
- எஸ்.வாசுதேவன், சென்னை-14; இரா.நல்லதம்பி, விருதுநகர்.

‘உங்களுக்கு நீங்களே டாக்டர்’ பகுதியில் தோப்புக்கரணம் போட்டால் மூளைக்கு உற்சாகம் கிடைக்கும் என்பதைப் படித்தேன். அப்ப இனி, மனைவி முன்னால் போடும் தோப்புக்கரணத்தைக்  கூட மூளைப் பயிற்சி என்று சொல்லி சமாளிச்சுடலாம்ங்கறீங்க..!
- டி.வி.மணிகண்டன், தேனி.

‘பெரிய ஹீரோக்கள் பண்ணுகிற அட்டகாசம் இருக்கே...’ என்று ஆரம்பித்து தங்கர்பச்சான் தன் பாணியில் அடித்த நக்கல், நெத்தி யடி. ‘இப்ப இவங்களைக் காப்பாத்த வடிவேலு வேற இல்ல’  என்ற
போது வெடித்துச் சிரித்து
விட்டேன்!
- எல்.மணிபாரதி, விழுப்புரம்.

‘ச்சீய் பக்கங்கள்!’ பகுதியில் பிகினி என்ற கவர்ச்சி உடையை பிரித்து மேய்ந்துவிட்டீர்கள்
என்றுதான் எழுத வந்தேன். அப்புறம் டபுள் மீனிங் தொனித்துவிடுமோ என்று விட்டுவிட்டேன். இந்தப் பகுதிக்கு வேறு எப்படித்தான் விமர்சனம் எழுதுவது... நீங்களே சொல்லுங்களேன்!
- ஆர்.விட்டல் பாபு, புதுச்சேரி.