கவிதைக்காரர்கள் வீதி
ரசனை
யார் ரசித்திருப்பார்கள்? இரவில் பெய்த மழை - பெ.பாண்டியன், காரைக்குடி.
ஏக்கம்
நான் பிடிக்கும்போது சட்டெனப் பறந்த பட்டாம்பூச்சி, குழந்தை தன்னைப் பிடிக்காதா என ஏங்குகிறது - ஏ.மூர்த்தி, புல்லரம்பாக்கம்.
வரவேற்பு
யாருமற்ற வீடு வரவேற்கிறது நேற்றைய வாசல் கோலம் - செ.அ.ஷாதலி, தென்காசி.
குறிபபு
அம்மணி அம்மாளுக்கு படிக்கத் தெரியாது; எழுதத் தெரியாது. ஒண்ணு ரெண்டு மூணு சொல்வாள். நம்பர் புரியாது! எண்பது வயது கடந்தும் அப்படியே இருந்து பேருந்து ஏறி நகரம் சென்று சரியாகப் பேருந்து ஏறி ஊர் வந்து விடுகிறாள். கூட்டமாய் இருப்பதொன்றே நம்மூர் பேருந்து என்ற ஒற்றைக் குறிப்போடு! - பா.விஜயராமன், திட்டச்சேரி.
சுவை
சிந்திய பால்சோறு சுவைத்தது குழந்தையின் மேனியை - டி.கிருஷ்ணமூர்த்தி, சென்னை-70.
|