ஜோக்ஸ்



‘‘தலைவர் கோபத்தின்

உச்சகட்டத்தில் இருக்கிறாரா... ஏன்?’’
‘‘அவர் எழுதின சுயசரிதைக்கு ‘சிறந்த க்ரைம் நாவல்’ விருது
குடுத்துட்டாங்களாம்...’’
-பர்வீன் யூனுஸ், சென்னை-44.

தத்துவம் மச்சி தத்துவம்

விமானம் கப்பல்ல ஏறிருச்சுன்னா, அதை ‘விமானந்தாங்கி கப்பல்’னு சொல்றாங்க. மானம் கப்பல் ஏறிருச்சுன்னா, அதை ‘மானந்தாங்கி கப்பல்’னு சொல்லுவாங்களா?
- மானம், மரியாதையை இழந்து யோசிப்போர் சங்கம்
- ஜி.தாரணி, அரசரடி.

என்னதான் பாத்திரத்துல ஓட்டை, உடைசல் அடைக்கிறவர் என்றாலும், அவரால ஓசோன் ஓட்டைய எல்லாம் அடைக்க முடியாது!
- சினிமா கதாபாத்திரங்களை ஓட்டையாக
உருவாக்குவோர் சங்கம்
- பெ.பாண்டியன், கீழசிவல்பட்டி.

‘‘டாக்டர்! இதுல இரண்டு மாத்திரை இருக்கே, எதை எப்போ சாப்பிடணும்?’’
‘‘இது நர்ஸை பார்க்கிறதுக்கு முன்னாடி, இது பார்த்ததுக்கு அப்புறம்...’’
- யுவகிருஷ்ணா, தூத்துக்குடி.

‘‘தலைவர் மேல ஹைஹீல்ஸ் வந்து விழுந்ததுக்கு சந்தோஷப்பட்டாராமே?’’
‘‘ஆமாம், மாடர்ன் பொண்ணுங்க எல்லாம் தன் மீட்டிங்குக்கு வருதுன்னு குஷியாயிட்டார் மனுஷன்!’’
- வி.சகிதா முருகன், தூத்துக்குடி.

‘‘எங்க தொகுதி மக்கள் என்னை கடவுளாத்தான் நினைக்கறாங்க...’’
‘‘அவுங்க கண்ணுலயே நீங்க படாததாலதானே அப்படிச் சொல்றாங்க?’’
- வி.ரேவதி, சென்னை-59.

‘‘எதிரி மன்னரின் காலடி படாத இடமே இல்லை...’’
‘‘அவர் நாட்டிலா?’’
‘‘ம்ஹும். நம் மன்னரின் முதுகில்!’’
- வீ.விஷ்ணுகுமார், கிருஷ்ணகிரி.