கவிதக்காரர்கள் வீதி



மரங்களின் நேசம்
கற்றுக் கொடுத்திருக்கலாம்
சிறகுகள் உதிர்ப்பதை
பறவைகளுக்கு,
இலையைப் போல.

புழுவின் ஈர்ப்பில்
தூண்டிலில் சிக்கிக்  
கரையில் கிடந்த மீன்
வாயைத் திறந்து திறந்து
மூடுவது
உயிர்ப்பிச்சையாக இருக்கலாம்.

தோண்டிய
இடத்திலேயே
புதைக்கவும் செய்யப்பட்டது
கிணறு.

துணி உலர்த்தும்
கம்பியில்
வரிசையாகக் கோர்த்திருந்த
மழைத்துளிகள்
குருவியொன்று
வந்தமர்ந்ததால்
உதிர்ந்தன.

இப்பொழுது
தொடர்ந்து ரசிக்கிறேன்
குருவியையும்.

குடை ராட்டினத்தின்
சுற்றல் நின்றதும்
தரை பாவாக்
குதிரைகள்
இறக்கைகளை
மடக்கி மறைத்தன
குழந்தைகள் இறங்கியதும்

பிடி நழுவி
புள்ளியாய் மறைந்த
பலூன்
பறித்துச் சென்றது
குழந்தையின் மனதையும்.

மகிவனி