மழைத்தும்பிகள்



*நாட்காட்டி தாளை
கிழித்தேன்
வீச மனசில்லை

*படுக்கையில்
நிகழ்வதா
யார் சொன்னது?

*மேலும்
கீழுமாய்
ஊர்ந்த எறும்புகள்
சந்தித்தன
உச்சியில்.

*கண்களை மட்டுமே
பேசவிட்டு
அழகு பாருங்கள்
முன்பும் சரி
பின்பும் சரி
உதடுகள் விரல்கள்
முணுமுணுக்க
கவிதை.

*இரண்டு மரங்கள்
காடாகுதல்
அதுதான் அது

*தொடுகிற தூரத்தை
தொலைதூரமாக்கு
துடிக்கும் பசி, ரசி.

அறிவுமதி