மழைத்தும்பிகள்
*நாட்காட்டி தாளை கிழித்தேன் வீச மனசில்லை *படுக்கையில் நிகழ்வதா யார் சொன்னது? *மேலும் கீழுமாய் ஊர்ந்த எறும்புகள் சந்தித்தன உச்சியில். *கண்களை மட்டுமே பேசவிட்டு அழகு பாருங்கள் முன்பும் சரி பின்பும் சரி உதடுகள் விரல்கள் முணுமுணுக்க கவிதை. *இரண்டு மரங்கள் காடாகுதல் அதுதான் அது *தொடுகிற தூரத்தை தொலைதூரமாக்கு துடிக்கும் பசி, ரசி. அறிவுமதி
|