அரசு வங்கிகளில் கிளர்க் ஆகவேண்டுமா?
தேர்வுக்கு தயாராகுங்க!
இந்தியன் வங்கி, கனரா வங்கி, இந்தியன் ஓவர்சீஸ் வங்கி உள்ளிட்ட 19 பொதுத்துறை வங்கிகளில் காலியாக உள்ள கிளா்க், புரொபேஷனரி அதிகாரி மற்றும் சிறப்பு அதிகாரி பணியிடங்களை நிரப்புவதற்கான பொது எழுத்துத் தேர்வு மற்றும் நேர்காணலை ஐ.பீ.பி.எஸ். நடத்தி வருகிறது.தற்போது கிளர்க் பணிகளுக்கான 5வது எழுத்துத் தேர்வை (சி.டபுள்யூ.இ.5) ஐ.பீ.பி.எஸ். அறிவித்துள்ளது. இந்த எழுத்துத் தேர்வு டிசம்பர் மாதமும் கும். பொது நேர்காணல் 2016ம் ஆண்டு பிப்ரவரி மாதமும் நடைபெற உள்ளது.
விண்ணப்பிக்க விரும்புபவர்கள் பெற்றிருக்க வேண்டிய தகுதிகள்:
கல்வித் தகுதி: அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகங்களில் ஏதேனும் ஒரு பிரிவில் இளங்கலை பட்டம் அல்லது இதற்கு இணையான படிப்புகளை முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். கம்ப்யூட்டரை இயக்கத் தெரிந்திருக்க வேண்டும்.வயது வரம்பு: 1.8.2015ம் தேதியில் 20 வயதைக் கடந்தவராகவும், 28 வயதிற்கு உட்பட்டவராகவும் இருக்க வேண்டும். ஓ.பி.சி. பிரிவினருக்கு 3 ஆண்டுகளும், எஸ்.சி./ எஸ்.டி., பிரிவினருக்கு 5 ஆண்டுகளும், ஊனமுற்றோருக்கு 10 ஆண்டுகளும் வயது வரம்பில் தளர்வு உண்டு.
தேர்வு செய்யும் முறை: விண்ணப்பிப்பவர்களுக்கு பொது எழுத்துத் தேர்வுகள் நடத்தப்படும். அதில் தேர்ச்சி பெறுபவர்களுக்கு பொது நேர்காணல் நடைபெறும். இரண்டிலும் தேர்ச்சி பெறுபவர்களுக்கு மதிப்பெண் சான்றிதழ் வழங்கப்படும். இந்தத் தேர்வை அனுமதிக்கும் 19 பொதுத்துறை வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களில் கிளர்க் பணியிடங்களுக்கான அறிவிப்புகள் வெளிவரும்போது, ஐ.பீ.பி.எஸ். அமைப்பு வழங்கிய மதிப்பெண் சான்றுடன் கலந்துகொண்டு பணி நியமனம் பெறலாம். 2016-2017 ஆண்டில் வங்கிகளில் சுமார் 30 ஆயிரம் கிளர்க் பணிகள் உருவாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
விண்ணப்பக் கட்டணம்: பொது மற்றும் ஓ.பி.சி. விண்ணப்பதாரர்கள் ரூ.600ஐ கட்டணமாக செலுத்தி விண்ணப்பிக்க வேண்டும். எஸ்.சி./ எஸ்.டி., பிரிவினர் மற்றும் ஊனமுற்றோர் ரூ.100 செலுத்தி விண்ணப்பித்தால் போதுமானது. கட்டணங்களை ஆன்லைன் முறையிலும், விண்ணப்ப செலான்களை பதிவிறக்கம் செய்து ஆப்லைன் முறையில் வங்கிகளில் நேரடியாகவும் செலுத்தலாம்.
விண்ணப்பிக்கும் முறை: விருப்பமும் தகுதியும் உடையவர்கள் ஐ.பீ.பி.எஸ். இணையதளத்தின் மூலம் விண்ணப்பத்தை தேவையான தகவல்களை நிரப்பி சமர்ப்பிக்கலாம். முன்னதாக மார்பளவு புகைப்படம், கையொப்பம் போன்றவற்றை பதிவேற்றம் செய்ய வசதியாக ஸ்கேன் செய்துகொள்ளுங்கள். விண்ணப்பம் சமர்ப்பித்ததும், ஆன்லைன் மற்றும் ஆப்லைன் முறைகளில் கட்டணத்தை செலுத்த வேண்டும். நிரப்பப்பட்ட விண்ணப்பத்தை பிற்கால உபயோகத்திற்காக 2 கணினி பிரதிகள் எடுத்து வைத்துக்கொள்ளவது நல்லது.
முக்கிய தேதிகள்: ஆன்லைன் மூலம் விண்ணப்பங்களை சமர்ப்பிக்க/கட்டணம் செலுத்த கடைசி நாள்: 1.9.2015. ஆஃப்லைன் முறையில் கட்டணம் செலுத்த கடைசி நாள்: 3.9.2015. முதல்நிலைத் தேர்வு நடைபெறும் நாட்கள்: 5.12.2015, 6.12.2015, 12.12.2015, 13.12.2015. முதன்மைத் தேர்வு நடைபெறும் நாட்கள் : 2.1.2016, 3.1.2016. மேலும் விவரங்களுக்கு: www.ibps.in.
|