அதிசய உடல்! வியக்கவைக்கும் உண்மைகள்




*நமது உடலின் கடின மான பகுதி பற்களைப் பாதுகாக்கும் எனாமல் ஆகும்.

*நமது வயிறு காலியாக உள்ளபோது மிகச் சிறியதாக இருக்கும். எனினும் அது குறைந்த பட்சம் 1.5 லிட்டர் உணவிலிருந்து அதிக பட்சம் 4 லிட்டர் அளவு உணவு வரை கொள்ளும் சக்தி படைத்தது.

*வெளிக்காற்று 21 சதவீத ஆக்சிஜனைக் கொண்டுள்ளது. எனினும் உடல் சுவாசிக்க காற்றிலிருந்து 5 சதவீத ஆக்சி ஜனே தேவைப்படுகிறது.

*திசுக்களைக் குறிக்கும் Cell என்னும் ஆங்கிலச் சொல் Cellula என்ற லத்தீன் சொல்லிலிருந்து பிறந்தது. இதற்கு  சிறு பெட்டி என்று பொருள்.
 
*ஒருவருடைய  ஆயுள் காலத்தில் இதயம் 3 ஆயிரம் கோடி முறை அடித்துக் கொள்கிறது. 100 நீச்சல் குளங்களில் நிரப்பத் தேவையான அளவுக்கு ரத்தத்தைப் பாய வைக்கிறது.

*இதயத்திலுள்ள வால்வுகள் ரத்தத்தை ஒரே திசையில் பாய வைக்கின்றன. இதயம் ஒவ்வொரு தடவை சுருங்கும்போதும் வால்வுகள் சட்டென்று மூடும் ஓசையே இதயத் துடிப்பாகக் கேட்கிறது.

*பகலை விட இரவில் மூளை சுறுசுறுப்பாக இயங்குகிறது. உயர்ந்த ஐக்யூ உள்ளவர்கள் அதிகமாக கனவு காண்கிறார்கள்.

*மூளை உடலின் மொத்த எடையில் 2 சதவீத எடையையே கொண்டுள்ளது. இது உடலில் 20 சதவீத ஆக்சிஜனை எடுத்துக் கொள்கிறது.

*மூளை 1.3 கிலோ கிராம் எடையுள்ளது. இதில் 10 ஆயிரம் கோடி நரம்பு செல்கள் உள்ளன.

*இரண்டு வகையான நரம்பு செல்கள் உள்ளன. முதல் நரம்பு செல்கள் உணர்வு உறுப்பிலிருந்து செய்திகளை வாங்கி மூளைக்கு அனுப்புகின்றன. இதை உணர்வு நரம்பு அணுக்கள் என்கிறோம். இரண்டாம் வகை நரம்பு செல்கள் தண்டுவடத்திலிருந்து தசை களுக்கும் சுரப்பிகளுக்கும் அனுப்புகின்றன. இவை இயக்க நரம்பு அணுக்கள் (Motor Neurons) என அழைக்கப்படுகின்றன.

*ஒரு ஆணின் சிறுகுடல் சராசரியாக 6.9 மீட்டர் நீளமும், ஒரு பெண்ணின் சிறுகுடல் 7.1 மீட்டர் நீளமும் இருக்கும்.

*உடல் திசுக்களின் நீர்த்தன் மையைப் பாதுகாக்கவும் உணவுப் பாதையிலிருந்து கொழுப்புப் பொருட்களை உட்கிரகிக்கவும் நிணநீர் உதவுகிறது. நுண்ணுயிரி களின் தாக்குலிலிருந்து உடலை இதுவே பாதுகாக்கின்றது.

*உடலின் எலும்புக் கூட்ட மைப்பு எலும்புக்கூடு எனப் படுகிறது. மண்டை ஓடு, முதுகெலும்புத் தொடர், கழுத்துப்பட்டை எலும்புகள், தோள்பட்டை எலும்புகள், விலா எலும்புக் கூடு மற்றும் கைகள், கால்கள், பாதங்கள் ஆகியவற்றின் எலும்புகள் இதில் அடங்கும். எலும்புக்கூடு உடலுக்கு ஆதார மாக விளங்கி உள் உறுப்புகளைப் பாதுகாக்கின்றது.

*கண்ணில் ஒளியை ஊடுருவ விடக்கூடிய கார்னியா (è¼MN) பகுதியில் ரத்த நாளங்கள் இல்லை. இது தனக்குத் தேவையான ஆக்சிஜனை நேரடியாகக் காற்றிலிருந்து பெறுகிறது. உடலின் மற்ற பாகங்கள் உடல் முழுவதும் பாய்கிற ரத்த நாளங்களிலிருந்து ஆக்சிஜனைப் பெறுகின்றன.

*ஒவ்வொரு சில நொடிக்கும் நாம் கண்களைச் சிமிட்டுகிறோம். கண் சிமிட்டும்போது கண்ணில் சுரக்கும் கண்ணீர், கண்ணின் மேற்பரப்பை தூசிகளின்றி சுத்தமாக வைக்க உதவுகிறது; இதுவே பாதுகாப்புக் கவசமாகவும் இருக்கின்றது.

*இதயத் துடிப்பின்போது இதயமானது ரத்த நாளச் சுவர்களுக்கு எதிராக ரத்தத்தைப் பாய்ச்சுவதால் ஏற்படும் விசை அல்லது அழுத்தம் ரத்த அழுத்த மாகும். ஒரு நபரின் இயல்பான ரத்த அழுத்தம் 120/80 மி.மீ பாதரச அளவாகும்.

*மனிதனை விட விலங்குகள் அதிகமாக நுகரும் ஆற்றலைக் கொண்டுள்ளன. நாய்களும் சுறா மீன்களும் மனிதனைவிடத் துல்லியமாக நுகரும் சக்தி கொண்டவை. குறைந்த வெளிச்சத்தில் மனிதனைவிட பூனை நன்றாகப் பார்க்கும்.

*சிறுநீரகங்கள் வயிற்றறையின் பின் சுவரில் ஒட்டியுள்ளன. இடது சிறுநீரகத்தைவிட வலது சிறுநீரகம் சற்றே கீழிறங்கி அமைந்துள்ளது. இவை நீர் சமநிலையைக் காப்பாற்றி வளர்சிதை மாற்றக் கழிவுகளை வெளியேற்றுகின்றன. ஒவ்வொரு 45 நிமிடமும் ரத்தத்திலுள்ள ஏறக்குறைய 4.5 லிட்டர் நீரை இவை வடிகட்டுகின்றன. ஒவ்வொரு சிறுநீரகத்திலுமுள்ள 10 லட்சத்திற்கு மேற்பட்ட நெஃப்ரான்கள் வடிகட்டுதல் மற்றும் மீளுறிஞ்சல் செயல் முறைகளில் பங்காற்றுகின்றன.

*மனித உடலில் உள்ள மிகப் பெரிய சுரப்பி கல்லீரல். இதிலிருந்து பித்த நீர் சுரக்கிறது. நமது உடல் நல்ல முறையில் இயங்க இது நாள்தோறும் 400 பணிகளை சிறப்பாகச் செய்கிறது.

*சுருங்கும் திறன் கொண்ட தசை என்ற திசு உடல் இயக்கத்துக்கான அசைதல், செரிமானம், கவனத்தைக் குவித்தல், ரத்த ஓட்டம், உடல் வெப்பம் உள்ளிட்டவற்றை ஏற்படுத்துகிறது. தசைகள் இழுக்கும் திறன் கொண்டவை. தள்ளும் திறன் அற்றவை. ஆதலின் இரண்டு ஜோடி தசைகள் ஒன்று சேர்ந்து எதிர் எதிர் திசையில் இழுக்கின்றன.

*மிருது தசைகள் மனிதனின் உணவுக் குழாயின் கீழ்ப்பகுதியில் உள்ளன. இவை கண்களிலும் உள்ளன. இது கண்ணுக்கு வருகின்ற ஒளியைக் கட்டுப் படுத்துகிறது. கண் தெளிவான உருத் தோற்றம் பெற இது உதவுகிறது.

*நாளச் சுரப்பியாகவும் நாளமில்லாச் சுரப்பியாகவும் செயல்படும் கூட்டுச் சுரப்பி கணையம் ஆகும். இது வயிற்றின் மேல் பகுதியில் உள்ள ஒரு பாகம். தொடர்ந்து கணையச் சாற்றை கணையக் குழாய் வழியாக முன் சிறுகுடலுக்குள் சுரக்கிறது. இது தொடர்பான குறைபாட்டால் நீரிழிவு நோய் ஏற்படுகிறது.

*வெளிச் செவி ஒலி அதிர்வு களை செவிக்குழல் வழியே செவிப்பறைக்குச் செலுத்த, கேட்டல் பாதையின் குறுக்கே இழுபட்டிருக்கும் அது, அதிர்வுகளை நடுச் செவிக்கு ஒலி பரப்புகிறது. அங்கிருந்து மூன்று சிறு எலும்புகள் கொண்ட சங்கிலி ஒன்று அதிர்வுகளை உள் செவிக்கு அனுப்புகின்றது. உட்செவியில் நத்தை வடிவ சுருள்குழாயில் உள்ள திரவம் உணர்வு நார்களைத் தூண்ட, அவை எழுப்பும் நரம்புத் தூண்டல்கள் செவி நரம்பு வழியே மூளையை அடையும்.

- க.ரவீந்திரன், ஈரோடு.