அகதிகள்



1994-ம் ஆண்டு. ருவாண்டாவில் ஹூட்டு, டூட்சி என்ற இரு இனங்களுக்கு இடையே கலவரம் வெடித்தது. லட்சக்கணக்கான மக்கள் இனப்படுகொலை செய்யப்பட்டனர். ஆயிரக்கணக்கான மக்கள் அருகிலிருந்த தான்சானியாவில் அகதிகளாக தஞ்சமடைந்தனர்.
1996-ம் ஆண்டு ருவாண்டாவைச் சேர்ந்த அகதிகளை தான்சானியா வெளியேற்றியது. எங்கு போவது என்று தெரியாமல் மூட்டை முடிச்சுகளுடன் ஆயிரக்கணக்கான மக்கள் நடந்து செல்லும் இப்புகைப்படம் எடுக்கப்பட்டு இருபது வருடங்களுக்கு மேலாகிவிட்டது. சமீபத்தில் இணையத்தில் வெளியாகி வைரலாகிவிட்டது.