பயம்மா .... இருக்கும்!



நட்புமுறையில் இரண்டு முன்னணி இயக்குனர்களிடம் அவ்வப்போது சினிமா கற்றவர் எஸ்.டி.அசோக். ‘இருக்கு’ படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமாகிறார். தயாரிப்பாளரும் அவரே. ‘பத்தாயிரங்கோடி’ ராஜ்குமார் ஒளிப்பதிவு செய்கிறார். பாடல்கள் எழுதி, இசையமைத்துப் பாடியிருக்கிறார் எஸ். விஜய் சங்கர். இயக்குனரின் லண்டன் நண்பர் சி.கோபிநாத் கதை, வசனம் எழுதியிருக்கிறார்.

மினரல் வாட்டர் சப்ளை செய்து வந்த ஜெயகாந்த் ஹீரோ, வாலன்டினா ஹீரோயின். ‘‘குழந்தைக்கு அப்பா சொல்லும் கற்பனைப் பேய்க்கதைதான் ‘இருக்கு’ படம்’’ என்கிறார் இயக்குனர். இந்தப்படத்தின் குழந்தை நட்சத்திரம் ஷோபியா ஒன்றரை மற்றும் நான்கு வயது என இரண்டு வேடங்களில் நடித்து, சொந்தக்குரலில் பேசியுள்ளார்.