பெருமூச்சு!
சரோஜாதேவி பதில்கள்
* மன்மத பானம் எங்கே கிடைக்கும்? - சங்கீத சரவணன், மயிலாடுதுறை. கண்ட இடத்துலே குடிச்சா கண்ட வியாதியெல்லாம் வரும். வீட்டுலேயே ரெடி பண்ணிக் கொடுக்கச் சொல்லுங்க.
* பெண்ணின் கன்னம் ஏன் சிவக்கிறது? - த.சத்தியநாராயணன், அயன்புரம். பூ மலர்வது வண்டுக்கு சிக்னல் கொடுப்பதற்காகத்தான்.
* ஆறுவிரல் கொண்ட பெண் காதல் வலையில் விழமாட்டாராமே? - எஸ்.அர்ஷத் ஃபயாஸ், குடியாத்தம். விரலுக்கும் காதலுக்கும் என்ன சம்பந்தம்? அதெல்லாம் வேறு பார்ட்ஸ்களின் டியூட்டி.
* நீங்கள் பெருமூச்சு விடுவது எந்த விஷயத்தில்? - வண்ணை கணேசன், பொன்னியம்மன்மேடு. எந்த பெரிய விஷயத்தைப் பார்த்தாலும் பெருமூச்சுதான்.
* தலையணை மந்திரம் இந்தக் காலத்திலும் செல்லுபடியாகிறதா? - எஸ்.கதிரேசன், பேரணாம்பட்டு (வேலூர் மாவட்டம்) எந்தக் காலத்திலும் செல்லுபடி ஆகும் ஒரே மந்திரம் இதுதான்.
|