பார்த்தமாதிரியே இருக்கு!



குழந்தைப்பருவம் முதலே அறிமுகமானவர்கள் ஹீரோவும், ஹீரோயினும். ஒருகட்டத்தில் ஹீரோயின் குடும்பம் இடம்பெயர்கிறது. திரும்பவும் குமரியாக ஊருக்கு வருகிறார் ஹீரோயின். வழக்கம்போல காதல். இந்த நிலையில் ஹீரோவின் அண்ணனும், ஹீரோயினின் அக்காவும் காதலித்து கல்யாணம் செய்துகொள்கிறார்கள். இதனால் ஹீரோ - ஹீரோயின் பிரியவேண்டிய சூழல். என்ன நடந்தது என்பதே மீதிக்கதை.

நாயகன் பரதன் ஓவர் ஆக்டிங் இல்லாமல் அடக்கி வாசித்திருக்கிறார். ஹீரோயின் ஹன்சிபா தன் பங்கை சிறப்பாக செய்திருக்கிறார். சூரி, கஞ்சா கருப்பு, ப்ளாக் பாண்டி ஆகியோர் சிரிக்க வைக்கும் வேலையை கச்சிதமாக செய்திருக்கிறார்கள்.

ஜெயப்பிரகாஷ், லிவிங்ஸ்டன், துவார் ஜி. சந்திரசேகர், சிங்கப்பூர் துரைராஜ் என படத்தில் வரும் அனைவரின் கதாபாத்திரங்களும் நன்று. அருள்தேவின் இசை படத்திற்கு கூடுதல் பலம் சேர்க்கிறது. மூவேந்தரின் கேமரா கண்களுக்கு விருந்து. இயக்குநர் எஸ்.பி.ராஜ்குமார் தன்னுடைய டிரேட் மார்க்கான காமெடியில் முத்திரை பதித்திருக்கிறார்.