வரதர் அருள் வாய்க்குமா?



சமீபத்தில் நடந்த காஞ்சி அத்தி வரதர் வைபவத்தின் கடைசிக் கட்டத்தில் நம்பர் ஒன் நடிகை திடீரென்று கலந்து கொண்டு அத்திவரதரை தரிசித்தது பரபரப்பாகி இருக்கிறது.கடந்த சில ஆண்டுகளாக வெற்றியை மட்டுமே சுவைத்து வந்த நாயகிக்கு இப்போது அடுத்தடுத்து தொடர் தோல்வி கள். பர்சனல் லைஃபும் இன்னும்ஸ்டெடி ஆகவில்லை.

கடுமையான மன உளைச்சலில் இருந்த நடிகையிடம் அத்திவரதரை சேவித்தால் அனைத்தும் நலமாகும் என்று ஆலோசனை கூறி யிருக்கிறார்கள். இப்போது நடிகை, உச்ச நடிகருக்கு ஜோடியாக நடித்து வருகிறார். உச்ச நடிகருடனேயே சேர்ந்து போய்வரதரை தரிசிக்கவும் விரும்பியிருக்கிறார். ஆனால், உச்ச நடிகரோடு போனால் அரசியல் சர்ச்சை எழலாம் என்பதால் தனியாகவே சென்று மனமுருக வேண்டினாராம்.தரிசனத்துக்குப் பிறகு புதுத்தெம்பு பிறந்திருக்கிறதாம். பார்ப்பவர்களிடமெல்லாம் ‘இனிமே நான் அடிக்கிறதெல்லாம் சிக்ஸர்தான்’ என்று உற்சாகமாக சொல்லி வருகிறாராம் நம்பர் ஒன்.

- விர்கோ