தாடியால் தடைபட்ட கல்யாணம்!



மத்தியப்பிரதேசத்தின் கண்ட்வா மாவட்டத்திலுள்ள அன்ஜாதி கிராமத்தில் குதூகலமாக கல்யாண நிகழ்வு  நடந்துகொண்டிருந்தது. ஆனால், அத்தனையும் கெட்டது தாடியால் என்றால் நம்புவீர்களா? மாப்பிள்ளை மங்கள்  சௌகான் மிடுக்குடன் ஸ்டைலாக கோட் சூட்டுடன் பெண்வீட்டில் போய் இறங்கினார்.

மாமனார் ராதேஸ்யாம் யாதவ், மாப்பிள்ளையின் ஸ்டைலிஷ் தாடியைப் பார்த்து கண்சிவந்து கல்யாண நிகழ்வுகளையே  நிறுத்தினார். ‘க்ளீன் ஷேவ் பண்ணினா கல்யாணம்’ என கட் அண்ட் ரைட்டாக சொல்லிவிட்டார்.இதனால்  இருவீட்டாரும் முட்டிக் கொண்டு சண்டையிட போலீசார் வந்து சமாதானம் செய்து வைத்தனர். கடைசியில்  மாப்பிள்ளை மீசையை மட்டும் வைத்துக் கொண்டு மணமேடை ஏறினார்! வாழ்க்கையே காம்ப்ரமைஸ்தானே மாப்பிள்ளை சார்!   

- ரோனி