மாமனிதர்!
சைபர் தீவிரவாதிகளுக்கு எதிரான ஆன்லைன் ஆர்மி இந்தியாவுக்கு மிக அவசியமான ஒன்று தான். - த.சிவக்குமார், திருச்சி; சீனிவாசன், எஸ்.வி.நகரம்; முருகேசன், கங்களாஞ்சேரி; நவாப், திருச்சி.
பேசாமொழியில் திகில் கிளப்பும் ‘மெர்க்குரி’ பட டீட்டெய்ல்கள் சொன்ன கார்த்திக் சுப்புராஜ் பேட்டி அசத்தல். - நரசிம்மராஜ், மதுரை;
மீனாட்சி, திருமுல்லைவாயில்; நாகராஜன், திருச்சி; சங்கீதசரவணன், மயிலாடுதுறை; த.சத்தியநாராயணன், அயன்புரம்.
சிறுவயதில், தான் பார்த்த மங்களாம்பிகா மெஸ் சுப்பிரமணியத்தை நடிக்க வைத்த ஷங்கர், சினிமா உலகில் மாமனிதர்தான். - ஆர்.கே.லிங்கேசன், மேலகிருஷ்ணன்புதூர்; சிதம்பரக்குமாரசாமி, அசோக்நகர்; ராமகண்ணன், திருநெல்வேலி; லட்சுமி நாராயணன், வடலூர்; முத்துவேல், கருப்பூர்; த.சத்தியநாராயணன், அயன்புரம்; சீனிவாசன், எஸ்.வி.நகரம்; தேவா, கதிர்வேடு.
மனைவி நூல்கள் எழுதுவதற்காக தன் வேலையை ராஜினாமா செய்த சுரேஷ் - வித்யாபவானி தம்பதியினரின் கலாசாரம் காக்கும் பணி வாழ்க! - வண்ணை கணேசன், பொன்னியம்மன்மேடு; மாணிக்கவாசகம், கும்பகோணம்.
அரசு பள்ளிகளை ஆசிரியர்களோடு இணைந்து வலுவாக்கும் ராஜசேகரின் பணி, பெருமிதம்! - எஸ்.நாகராஜன், திருச்சி; சோழா புகழேந்தி, கரியமாணிக்கம்; மோகன், சென்னை; ஆனி அஞ்சலின், சென்னை; மனோகர், கோவை; ராஜ்குமார், குன்னூர்; மாணிக்கவாசகம், கும்பகோணம்; பிரதீபா ஈஸ்வரன், சேலம்.
‘கந்தல்’, ‘நினைவுகள்’ இரு கவிதைகளும் சிறப்பு. இதில் கந்தல் சாமுத்திரிகா பட்டுபோல இதயத்தை வசீகரித்துவிட்டது. - விஜயநிர்மலன், சென்னை; நவாப், திருச்சி.
AI தொழில்நுட்பத்தை எளிமையா தெளிவா சுருக்கமாக சொன்ன ‘குங்கும’த்திற்கு சூப்பர் ஷொட்டு! - மயிலைகோபி, அசோக்நகர்; நவாப், திருச்சி.
அருண்சரண்யாவின் ‘சோதனை’ சிறுகதையை தவிப்பும், மன நெகிழ்ச்சியுமாக படித்தோம். - நம்ஷிகா, கருப்பூர்; சைமன்தேவா, விநாயகபுரம்; சித்ரா, திருவாரூர்.
வைட்டமின் டி பற்றிய மருத்துவ மாயைகளை விலக்கி உண்மையை அடையாளம் காட்டியதற்கு நன்றி. - ஏ.எஸ்.யோகானந்தம், ஈரோடு; தேவதாஸ், பண்ணவயல்; மகிழை சிவகார்த்தி, புறத்தாக்குடி; வளையாபதி, தோட்டக்குறிச்சி; சித்ரா, திருவாரூர்; கைவல்லியம், மானகிரி.
லன்ச் மேப்பில் மங்களாம்பிகாவின் கடப்பா, வெந்தயதோசையை விவரித்தது சாப்பிட்டது போல சூப்பர் ருசி. - வண்ணை கணேசன், பொன்னியம்மன்மேடு; வரலக்ஷ்மி முத்துசாமி, முகப்பேர்.
சிலம்பாட்ட சாம்பியன் சிங்கமான கௌசிக் பழனிச்சாமி போன்ற யூத்களின் முயற்சிகளே பாரம்பரிய தொன்மைக்கலைகளைக் காப்பாற்ற உதவும். - ஏ.எஸ்.யோகானந்தம், ஈரோடு.
|