Readers View



மேகத்தையும் அதைவிட உயரமான ஆகாயத்தையும் பெயரில் வைத்துள்ள நடிகை மேகா ஆகாஷின் பேட்டி ரொம்ப க்யூட்!
- ரவிக்குமார், பொள்ளாச்சி; மல்லிகா அன்பழகன், சென்னை; இலக்சித், மடிப்பாக்கம்; பிரேமா பாபு, சென்னை.

‘தை பிறந்தது... தமிழ்சினிமாவுக்கு வழி பிறந்தது’ கட்டுரை பிரமாதம். துல்லியமாக அலசி தியேட்டருக்குச் சென்று படம் பார்க்க வேண்டும் என்ற ஆசையைத் தூண்டிவிட்டீர்கள்.
- ஆ.சீனிவாசன், எஸ்.வி.நகரம்; மீனாட்சி, திருமுல்லைவாயல்; எஸ்.பூதலிங்கம், நாகர்கோவில்; ஜெயசந்திர பாபு, சென்னை; பிரேமா பாபு, சென்னை; ப.மூர்த்தி, பெங்களூரு; ஆர்.கே.லிங்கேசன், மேலகிருஷ்ணன்புதூர்; அ.முரளிதரன், மதுரை; ஜி.பிரேமா, சென்னை; த.சத்தியநாராயணன், அயன்புரம்; நவீனா தாமு, பொன்னேரி; கோவிந்தசாமி, ஊத்தங்கரை; மயிலை.கோபி, திருவாரூர்.

‘96’ படஇயக்குநர் ஒருடஜன் பூனைகளை வளர்ப்பது, ‘உயிர்களிடத்தில் அன்பு வேண்டும்’ என்ற பாரதி வரியை நினைவூட்டியது.
- அ.யாழினி பர்வதம், சென்னை; மனோகர், மேட்டுப்பாளையம்; பிரேமா பாபு, சென்னை; வண்ணை கணேசன், சென்னை.

உலகளவில் பரபரப்பாக பாராட்டுக்குள்ளாகி கலெக்‌ஷனை அள்ளியதோடு மட்டுமல்லாமல் தங்களின் கடவுளான ‘தேவுடு’வே நேரில் வந்ததுபோல ஆந்திர மக்களைப் புல்லரிக்க வைத்த செய்தி ஆச்சர்யம். ‘தேவுடு’ கட்டுரை அல்ல; புகழ் மகுடம்.
- நிலவழகு, நீலாங்கரை; மீனாட்சி, திருமுல்லைவாயல்; த.சத்தியநாராயணன், அயன்புரம்; கே.கே.யாழன், ஜோலார்பேட்டை; வண்ணை கணேசன், சென்னை; பிரேமா ராஜ்குமார், குன்னூர்; அ.யாழினி பர்வதம், சென்னை; நவீனா தாமு, பொன்னேரி.

‘ரிஷிபாலா டூ சிம்ரன்’ லைஃப் டிராவல் - சுவாரஸ்யம், குதூகலம்.
- மயிலை.கோபி, திருவாரூர்; பிரேமா, சென்னை; சண்முகராஜ், திருவொற்றியூர்; வண்ணை கணேசன், சென்னை; செம்மொழி, சேலையூர்; அ.யாழினி பர்வதம், சென்னை.

மேல்சாதியினருக்கு 10% இடஒதுக்கீடு இன்னொரு போராட்டத்திற்கு வழிவகுக்கிறது. - கைவல்லியம், மானகிரி; பிரேமா ராஜ்குமார், குன்னூர்; எஸ்.பூதலிங்கம், நாகர்கோவில்; இரா.வளையாபதி, தோட்டக்குறிச்சி.

‘இந்தியாவில் மீண்டும் தொழுநோய்’ - படித்தேன், அதிர்ந்தேன்.
- மனோகர், திருச்சி; கைவல்லியம், மானகிரி; சிவக்குமார், சீர்காழி; சாந்தா, மதுரை.

அன்பின் மகத்துவத்தை உணர வைத்தது கார்த்திக் நேத்தாவின் பேட்டி.
- சண்முகராஜ், திருவொற்றியூர்; மல்லிகா அன்பழகன், சென்னை.

கானுயிர் புகைப்படக் கலைஞரான சரவணன் சுந்தரத்தின் படங்கள் மெய் சிலிர்க்க வைக்கிறது.
- கைவல்லியம், மானகிரி; பிரேமா, சென்னை; சண்முகராஜ், திருவொற்றியூர்; புனிதவதி, கோவை; வண்ணை கணேசன், சென்னை.