
சர்வதேச அடையாளச் சின்னமாக இருக்கும் அண்ணா நூற்றாண்டு நூலகத்தை மாற்றப்போகிற நடவடிக்கை மனதை வலிக்கச் செய்கிறது.
- நாகராஜன், திருச்சி-7.

காற்றிலிருந்து தண்ணீர் அளிக்கும் ‘ஆகாஷ் கங்கா’ சாதனம் வெகு புதுமை. இன்னமும் மலிவு விலையில் கிடைத்தால் மக்கள் போட்டி போட்டுக் கொண்டு வாங்குவர்.
- காமாட்சி சத்தியநாராயணன், சென்னை-61.

சிலைகள் களவாடப்படுவதைப் பற்றிப் படித்து மனமுடைந்து சிலை போல ஆனேன். கடத்தல்காரர்களை அந்த தெய்வமே தண்டித்தால்தான் உண்டோ?
- ஆர்.சுகுமாரி, சிவகங்கை.

‘ஒஸ்தி’ படத்தில் பின்னணிப் பாடகியாக செகண்ட் இன்னிங்¬ஸ் ஆரம்பித்திருக்கிறார் காந்தக் குரலழகி எல்.ஆர்.ஈஸ்வரி. இனி தமிழகம் ஜர்தா பீடா போல அவங்க பெயரைத்தான் மெல்லும்!
- இரா.வளையாபதி, கரூர்.

சூப்பர் ஸ்டார் ரஜினி பற்றிய ‘அப்டுடேட்’ தகவல்களை அவ்வப்போது வெளியிட்டு ரஜினி ரசிகர்களின் நெஞ்சங்களில் நீங்கா இடம்பிடித்து இருக்கிறீர்கள்!
- த.சத்தியநாராயணன், சென்னை-39.

பாடலாசிரியர் பழநிபாரதி பக்கம் படித்தேன். பல் தேய்க்க உமிக்கரி எவ்வளவு சிறந்தது என்பதை தாத்தாமார்களிடம் கேட்டால் தெரியும். அவ்வளவு மகத்துவமுங்க!
- வே.முருகேசன், சென்னை88.

‘நண்பன்’ படத்தின் மும்மூர்த்திகளான விஜய், ஜீவா, ஸ்ரீகாந்த் பற்றி ஷங்கர் சொல்லிய விதம் சிறப்பாக இருந்தது.
- டி.வெங்கடேஷ்பாபு,காரமடை.

தன் இசையால் கோடானுகோடி உள்ளங்களின் சோகத்தை இசைஞானி தீர்த்து வைத்துள்ளார். அவருக்கு ஆறுதல் கூறுவதற்கும் அந்த இசையே துணை நிற்கட்டும்.
- வி.நிம்மி, சென்னை-62.

உழைப்புக்கேற்ற உயர்வு நிச்சயம் கிடைத்தே தீரும் என்பதை நிரூபித்துக் காட்டியது சீனாவின் ஹுவாக்ஸி கிராமம்!
-எஸ்.கோபாலன், சென்னை-61.