ஜோக்ஸ்





‘‘தலைவர் ஏன் கடுப்பா இருக்கார்..?’’
‘‘வாசல்ல யாரோ ‘இன்றைய ஊழல், நாளைய புழல்’னு எழுதிப் போட்டிருக்காங்களாம்..!’’
- அம்பை தேவா, சென்னை-116.  

‘‘அந்த சாமியார் எப்பவும் ‘கூகுள் எர்த்’தைப் பார்த்துக்கிட்டே இருக்காரே... ஏன்?’’
‘‘ஏதாவது பிரச்னைன்னா தலைமறைவாக இடம் பார்த்துட்டு இருப்பாராம்..!’’
- எஸ்.எஸ்.பூங்கதிர், வில்லியனூர்.

‘‘தலைவர் புதுசா கூலிக் கழுதைப் படை ஒண்ணை உருவாக்கி இருக்காராமே...’’
‘‘ஆமா... காசு கொடுத்தா எதிர்க்கட்சி போஸ்டர்களை எல்லாம் கிழிச்சுத் தின்னுடுமாம்!’’
- ஏ.நாகராஜன், சென்னை-75.

‘‘தலைவரே! மேடையில எவ்வளவு நேரம் பேசப் போறீங்க..?’’
‘‘ஒரு ஜோடி செருப்பு வந்து விழற வரைக்கும்...’’
- ஏ.மூர்த்தி, புல்லரம்பாக்கம்.

‘‘கோர்ட் விசாரணையில தலைவரை ரொம்ப நேரம் பேசவிட்டது தப்பாப் போச்சா... ஏன்?’’
‘‘தலைவர் பேச்சைக் கேட்டதுல ஜட்ஜே தூங்கிட்டார்..!’’
- பெ.பாண்டியன், காரைக்குடி.

‘‘புலவரே... என்ன எழுதி இருக்கிறீர்? ஒன்றையுமே படிக்க இயலவில்லையே!’’
‘‘அந்தப் பனை ஓலையில் இந்த ஃபான்டை பதிவிறக்கம் செய்து கொள்ளுங்கள் மன்னா. தெளிவாகப் படிக்க முடியும்!’’
- சுப.தனபாலன், முத்துப்பேட்டை.

‘‘உங்களைப் பார்க்கத்தான் வந்துக்கிட்டு இருக்கேன்...’’
‘‘அடடே, நானும் உங்களைப் பார்க்கத்தான் வந்துக்கிட்டு இருக்கேன்!’’
‘‘அப்ப உங்ககிட்டேயும் பணம் இல்லையா..?’’
- கி.ரவிக்குமார், நெய்வேலி.