கவிதைக்காரர்கள் வீதி

* படுக்கையறையில் நான் வெளியே வானம் விழித்திருக்கிறது. * வெள்ளத்தில் மிதக்கும் காகிதக் கப்பல் நனைந்துவிடாதபடி குடை பிடித்துக் கொண்டிருந்தார் கடவுள். * மழை நாட்களில்தான் எத்தனை குளியல் மரங்களுக்கு
* நீண்ட மௌனத்திற்குப் பிறகு வெளிப்படும் வார்த்தைகளில் ஏதோ ஒரு உண்மை இருக்கிறது.
* மொட்டைப் பனைமரத்தில் அமர்ந்திருக்கும் ஒற்றைக் காகம் தூக்கத்தில் கூட யோசிக்க வைக்கிறது
* கடந்த காலக் குப்பையில் எது கிடைத்தாலும் புதையல்தான்.
* எவராலும் கண்டுபிடிக்க முடியாத மறைவிடம் தேடினேன் எங்கேயும் பின்தொடர்ந்து வந்துவிடுகிறது நிழல்.
* அலுவலகப் பணி நிமித்தம் முகமன் கூறி கைகுலுக்கும்போது புன்னகைப் பிரதி ஒன்றை வெளிப்படுத்த நேர்கிறது. ப.மதியழகன்
|