ஜோக்ஸ்





‘‘எப்பல்லாம் உங்களுக்கு இதயம் வலிக்குது..?’’
‘‘நர்ஸ் டியூட்டி முடிஞ்சு போகும்போதெல்லாம் டாக்டர்..!’’

‘‘என்ன இது... மேடையில எல்லாரும் குறட்டை விட்டு தூங்கறாங்க?’’
‘‘மேடையில குட்டிக் கதைகள் சொல்லிட்டிருந்த தலைவர், இப்ப முழுநாவலே சொல்லுறாராம்!’’
- வி.சகிதா முருகன், தூத்துக்குடி.

‘‘என்னய்யா இது... மாமூல் டாலர்ல வந்திருக்கு?’’
‘‘நாம வளர்த்துவிட்ட திருடன்கள் இப்ப வெளிநாட்டுலயும் இருக்காங்க சார்..!’’
- பெ.பாண்டியன், காரைக்குடி.   

‘‘தலைவரோட அப்பாவித்தனத்துக்கு அளவே இல்லை...’’
‘‘ஏன்... என்ன செஞ்சார்?’’
‘‘குற்றப் பத்திரிகை கொடுத்திருக்காங்களே... எவ்வளவு மொய் வைக்கணும்னு கேட்குறார்!’’
- ராம்ஆதிநாராயணன், தஞ்சாவூர்.

‘‘தலைவர் மேடையில ஏன் ரொம்ப கோபமா உட்கார்ந்திருக்காரு..?’’
‘‘அவரோட செருப்பையே திருடி அவர் மேல யாரோ வீசிட்டாங்களாம்...’’
- மு.மதிவாணன், அரூர்.

‘‘எதிரியின் போர் ஓலைக்கு என்ன பதில் எழுதட்டும் மன்னா..?’’
‘‘பதுங்கு குழிகள் அனைத்திலும் மழைநீர் நிரம்பியுள்ளதால், இரண்டு வாரம் கழித்து கிளம்பி வரச் சொல்லும்...’’
- சரவணன், கொளக்குடி.

‘‘மகளிரணித் தலைவியை நம்ம தலைவர், யாருக்கும் தெரியாம ரகசியக் கல்யாணம் பண்ணிக்கிட்டார்னு எதை வச்சு சந்தேகப்படறே..?’’
‘‘மேடையிலகூட அவங்க முன்னால பேசறதுக்கு பயப்படறாரே...’’
- கே.ஆனந்தன், பி.பள்ளிப்பட்டி.