நியூஸ் வே





சுந்தர்.சி மீது படு பொறாமையில் இருக்கிறார்கள் தமிழ் ஹீரோக்கள். அவர் ஹீரோவாக நடிக்கும் படத்தில் ஹன்சிகா, ஆண்ட்ரியா, லட்சுமி ராய் என மூன்று பேரும் அவர் ஜோடியாகவோ, அல்லது கனவிலோ வரும்படியாக காட்சிகள் அமைந்திருக்கின்றன. கேட்டால் சிரிக்கிறார் சுந்தர்.சி.

டெல்லி அருகே நொய்டாவில் இருக்கும் ட்ராக்கில் நடைபெற்ற ‘ஃபார்முலா 1’ கார் பந்தயத்தில் செபாஸ்டியன் வெட்டல் வென்றிருக்கிறார். இந்தியாவில் இந்த ரேஸ் விளையாட்டாக இன்னும் அங்கீகரிக்கப்படவில்லை. அதனால் வரி கட்டி இதை ஒரு கேளிக்கை போல நடத்த வேண்டிய நிலைமை. பல்வேறு கட்டமாக பல நாடுகளில் நடக்கும் இந்த ரேஸ், அடுத்த ஆண்டு இந்தியாவில் நடைபெறாது. பல நாடுகளும் முட்டி மோதுவதால் இந்தியா தவிர்க்கப்பட்டிருக்கிறது.

இப்போது மூன்றே படங்களை மட்டும் ஒப்புக்கொண்டுள்ளார் த்ரிஷா. எல்லாம் அடுத்த வருட மத்தியில் முடிந்துவிடும். அதற்குப் பிறகு நிச்சயம் கல்யாணமாம். தெலுங்கு தேசத்தில் புரொட்யூசர் தாத்தாவை சமாதானம் செய்துவிட்டார்கள். அனேகமாக புதுவருடத் துவக்கத்தில் அதிகாரபூர்வ செய்தி வரலாம்.
டைரக்டர் கௌதம் மேனன் அடுத்தடுத்து இரண்டு படங்கள் செய்கிறார். நாலே மாதத்தில் சிம்புவை வைத்து ஒரு காதல் கதை. பிப்ரவரி மாதத்திலிருந்து விக்ரமை வைத்து ஒரு ஆக்ஷன் கதை. இருவரிடமும் பாதிக் கதைக்கு மேல் சொல்லி ஓகே ஆகிவிட்டது. ஸ்டார்ட் ம்யூசிக்!

‘கலகலப்பு’ தெலுங்கு ரீமேக்கில் அல்லரி ரமேஷ் நடிக்கிறார். தமிழில் விமல், சிவா நடித்த இரண்டு கேரக்டர்களுக்குமே அல்லரியே மேக்கப் போடுகிறாராம். யெஸ், இரட்டை வேடம்.
நூறு கோடி ரூபாய் செலவில் தயாராகும் ‘ராம்லீலா’ படத்தை ரவிவர்மன்தான் ஒளிப்பதிவு செய்கிறார். ஏராளமான முன்னணி ஒளிப்பதிவாளர்களில் சஞ்சய் லீலா பஞ்சாலி தேர்வு செய்தது ரவிவர்மனைத்தான். யூ டியூபில் எக்கச்சக்க ஹிட்டுகளை ‘ராம்லீலா’ டிரெய்லர் பெற்றுவிட்டது. டிரெய்லரைப் பார்த்துவிட்டு கிட்டத்தட்ட ரவியைக் கொஞ்சி
யிருக்கிறார் அவரது குரு பி.சி.ஸ்ரீராம்.

உலகப் புகழ்பெற்ற இசைப் பிரபலம் ஜுபின் மேத்தாவின் இசை நிகழ்ச்சி சமீபத்தில் காஷ்மீரில் நடந்தது. காஷ்மீர் மக்கள் இதைப் புறக்கணித்தாலும், மாநில அரசின் ஆதரவோடு நடத்தப்பட்டது. இதேபோன்ற ஒரு இசை நிகழ்ச்சியை காஷ்மீரில் நடத்த ஆசைப்படுகிறார் ஏ.ஆர்.ரஹ்மான். ‘‘காஷ்மீர் ஒரு அழகான பிரதேசம். அங்கு நேரடி இசை நிகழ்ச்சி நடத்த யாருக்குத்தான் ஆசை இருக்காது? ஆனால் காஷ்மீர் மக்கள் விரும்பினால் மட்டுமே நான் நிகழ்ச்சி நடத்துவேன்’’ என்கிறார் ரஹ்மான். 

‘காதலில் சொதப்புவது எப்படி?’ பாலாஜி மோகனின் அடுத்த படத்தின் நாயகன் மம்முட்டியின் மகன் தல்கார் சல்மான் என்பது தெரிந்ததே. சல்மான் ஜோடியாக நடிக்கப் போவது புகார் புகழ் நஸ்ரியா. படத்துக்கு அனிருத் இசையமைக்கிறார்.



‘விஸ்வரூபம் 2’ ரெடியாகி விட்டது. தியேட்டர்கள் கூட கணிசமாகத் தருவதாக ஒப்புக்கொண்டு விட்டார்கள். கமல்தான் வெளியாகப் போகிற மற்ற படங்களுக்கு இடைஞ்சலாக இருக்க வேண்டாம் என ஜனவரிக்கு தள்ளி வைத்து விட்டார். சீனியர் சீனியர்தான்!

ஜாலி, வேடிக்கை எல்லாவற்றையும் ஒதுக்கி வைத்து விட்டு கே.வி.ஆனந்தின் ‘அனேக’னுக்கு சின்சியர் உழைப்பைத் தந்து நடித்து வருகிறார் தனுஷ். ‘ஏன்... எதற்கு... இப்படி இருக்கலாமே...’ என கேள்விகள் எதையும் இப்போது கேட்பதில்லை. வரிசையாக ஐந்து படங்களின் தோல்வி அவரை அப்படி ஆக்கிவிட்டது.

ஒவ்வொரு சிணுங்கலுக்கும் ஹன்சிகாவிடமிருந்து சிம்புவிற்கு போன் வருகிறது. ஒவ்வொரு பட ஒப்பந்தத்திற்கும் நஸ்ரியாவிடமிருந்து ஜெய்க்கு போன் வருகிறது. அதே மாதிரி போன் ஆர்யாவிற்கும் நயனிடமிருந்து வருகிறது. காளைகள் போனில் பதறுவதைப் பார்த்து, கண்சிமிட்டி சிரிக்கிறார்கள் ஷூட்டிங் ஸ்பாட்களில்!

அனேகமாக விஜய் சேதுபதியின் ‘சங்குத்தேவன்’ டிராப் ஆகி விடும் என்கிறார்கள். நிறைய நாள் ஷூட்டிங் போயும் குறைவான சீன்களை எடுத்திருப்பதுதான் காரணம். விஜய்சேதுபதி மீசையைப் பார்த்து டைரக்டர் பயந்திருப்பார். டைம் கொடுங்கப்பா!
கர்நாடக மாநிலம் ஹம்பி அருகே உள்ள பதாமி கலைக்கோயில்கள், மீண்டும் தமிழ் சினிமாவின் பரபர லொகேஷனாக மாறிவிட்டன. விஜய்சேதுபதி நடிக்கும் ‘ரம்மி’, விக்ரமன் இயக்கும் ‘நினைத்தது யாரோ’ படங்களின் பாடல்கள் அங்குதான் படமாக்கப்பட்டுள்ளன.

‘என்னமோ ஏதோ’ படத்தில் மூன்று ஹீரோயின்கள். ஆனாலும் ஷூட்டிங் ஸ்பாட்டில் ராகுல் ப்ரீத் சிங்குடன் மட்டும் காமெடி, கடலை என்று எக்கச்சக்க கெமிஸ்ட்ரியுடன் இருக்கிறாராம் கௌதம் கார்த்திக்.

கிட்டத்தட்ட ஷங்கரின் ‘ஐ’ படம் முடிந்துவிட்டது. இனிமேலும் கால்ஷீட்டுக்கு இடம் கொடுக்காமல் மற்ற இயக்குநர்களின் கதைகளைக் கேட்க ஆரம்பித்து விட்டார் விக்ரம். நிலவரத்தைப் புரிந்துகொண்டு படத்தை முடிப்பதில் தீர்மானமாகி விட்டார் ஷங்கர். பிப்ரவரிக்குள் பழையபடி இயல்பான உடலுக்குத் திரும்பும் உத்தேசத்தில் இருக்கிறார் விக்ரம்.

சைலன்ஸ்

‘உடம்பை பாதிக்கும் மேலே குறைத்து விட்டேன்’ என புதுப்புது போட்டோக்களை அதிபயங்கரமாக எடுத்து அனுப்பி வருகிறார் ‘மச்சான்ஸ்’ நடிகை. போட்டோக்களைப் பார்த்து மிரண்டவர்கள், அம்மணி போன் வந்தாலே அலறுகிறார்கள். எங்காவது விழாக்களில், ஹோட்டல்களில் பார்த்தாலும், வராத காலுக்கு பதில் பேசும் சாக்கில் காதில் போனை வைத்தபடி பறக்கிறார்கள். ஊருக்கே திரும்பிவிடலாமா என்ற யோசனையில் இப்போது இருக்கிறார் நடிகை.

‘தல’ நடிகரின் அடுத்த படமும் அதே புரொட்யூசருக்குத்தான். வெளிச்ச நடிகர் வேண்டாம் என மறுத்த ஸ்கிரிப்ட்டில் நடிக்கிறார். அந்த ‘புத்த’ இயக்குனரை அவரே அழைத்துக் கொண்டுபோய் புரொட்யூசரை ஆபீசில் பார்த்தார். எல்லாம் முடிவாகிவிட்டது... இப்படியெல்லாம் கடந்த வாரத்தில் கோலிவுட்டை ரவுண்டு கட்டி அடித்தது செய்தி. எல்லாமே பொய்யாம்! சம்பந்தப்பட்ட இரண்டு பேரும் நிஜத்தில் சந்திக்கவே இல்லையாம். தீபாவளி படம் யார் தொல்லையும் இல்லாமல் வெளிவர வேண்டும் என்பதற்காக படக் கம்பெனி தரப்பிலிருந்தே பரப்பி விட்டதாக சொல்கிறார்கள்.