தண்டனை



‘‘சார், நம்ம சர்வர் முத்துவுக்கு சம்பளத்தைக் குறைங்க. கஸ்டமர்ஸ்கிட்ட சிடுசிடுன்னு எரிஞ்சு விழறானாம்... டிப்ஸ் கேட்குறானாம்... பலரும் புகார் சொல்றாங்க. கூட வேலை பாக்கறவங்களுக்கும் அவனைப் பத்தி நல்ல அபிப்ராயம் இல்ல!’’

- ஹோட்டல் முதலாளியிடம் சொன்னார் மேனேஜர் வாசன். ‘‘முத்து பல வருஷமா இருக்கான். நேரம் காலம் பார்க்காம வேலை செய்யுறான். அதை நாம அங்கீகரிக்கணும். மத்தவங்க சொல்றதை வச்சி ஒரு முடிவுக்கு வரக் கூடாது!’’ என்றார் முதலாளி.

ஆனாலும் மேனேஜர் சமாதானம் ஆகவில்லை. தயங்கியே நின்றார். ‘‘நீங்க வேணும்னா முத்து பின்னாடியே போய் நிஜத்தில் என்ன நடக்குதுன்னு பார்த்துட்டுச் சொல்லுங்களேன்’’ என அனுப்பி வைத்தார் முதலாளி. அடுத்த நாள், உற்சாக முகத்தோடு வந்து நின்றார் மேனேஜர்.

‘‘சார், முத்துவுக்கு சம்பளம் ஏத்திக் கொடுங்க சார். அவன் எந்தத் தப்பும் செய்யலை. தேவையில்லாத இடத்துல ஓடுற ஃபேனையும் லைட்டையும் நிறுத்தச் சொல்றான். அது மத்தவங்களுக்குப் பிடிக்காம புகார் சொல்றாங்க...’’ ‘‘இதுதான் சரி. எந்த ஊழியரையும் அவங்க சொல்றாங்க, இவங்க சொல்றாங்கன்னு தண்டிக்கக் கூடாது. அப்படி செய்தா ஆத்மார்த்தமான ஊழியர்கள் நம்மை விட்டுப் போயிடுவாங்க’’ என்றார் முதலாளி. 

க.கமலகண்ணன்