ஜோக்ஸ்



‘‘ஜெயில்ல இருந்து ரிலீசான இரண்டு தலைவர்களும் என்ன சொல்றாங்க..?’’
‘‘இனிமேல் கட்சியில் இரட்டை ‘புழல்’ துப்பாக்கியா செயல்பட போறாங்களாம்..!’’
- பர்வீன் யூனுஸ், சென்னை-44.

‘‘அந்தக் கிளி ஜோசியர் நாற்பது சீட்டுக்களை வச்சி ஜோசியம் சொல்றார்...’’
‘‘பார்த்தேன்... இது லோக்சபா தேர்தல் நேரமாச்சே!’’
- ஜெ.தனலட்சுமி, கோவை.

‘‘தலைவர் ரொம்ப வெகுளியா இருக்கார்..!’’
‘‘எப்படிச் சொல்றே?’’
‘‘தட்கல்ல முன் ஜாமீன் வாங்க முடியுமான்னு கேட்டாரே..!’’
- வீ.விஷ்ணுகுமார், கிருஷ்ணகிரி.

என்னதான் ‘லொள்ளு’ பண்ற ஆளா இருந்தாலும், அதை வச்சு ஒரு நாய்க்குக்கூட டப்பிங் வாய்ஸ் குடுக்க முடியாது!
- நாய்களுக்கு சப்போர்ட்டாக வாலை நிமிர்த்தி கேள்வி கேட்போர் சங்கம்
- அனார்கலி, தஞ்சாவூர்.

ஸ்பீக்கரு...

‘‘கூட்டணிக் கட்சிகளுக்காக தலைவர் கதவைத் திறந்து வைத்திருக்கும் அதே வேளையில், எங்களைப் போன்ற சிறுகட்சிகளுக்கு ஜன்னலையாவது திறந்து வைக்குமாறு கேட்டுக் கொள்கிறேன்!’’
- வி.சகிதா முருகன்,
தூத்துக்குடி.

‘‘தலைவர் மேடையேறிட்டு ஏன் மன்னிப்புக் கேட்கறார்..?’’
‘‘தொண்டர்களுக்கு சொல்ல மனப்பாடம் பண்ணிட்டு வந்த குட்டிக்கதை பாதியில மறந்து போயிடுச்சாம்..!’’
- பெ.பாண்டியன், கீழசிவல்பட்டி.

‘‘தலைவரோட ஜுரத்துக்கு மருந்தே கிடையாதுன்னு டாக்டர் ஏன் கையை விரிச்சுட்டாரு..?’’
‘‘அவருக்கு வந்திருக்கிறது, கூட்டணி அமையாததாலே வந்த ஜுரமாச்சே..!’’
- அ.ராஜப்பன், கருமத்தம்பட்டி.