ஜோக்ஸ்



ஸ்பீக்கரு...

‘‘தலைவரோட பேச்சைக்
 கேட்க வந்தவரை போலீஸ் ஏன் பிடிச்சாங்க?’’
‘‘கடைசி வரைக்கும் உட்கார்ந்து இருந்ததால, சந்தேகக் கேஸ்ல பிடிச்சுட்டாங்க..!’’
- என்.உஷாதேவி, மதுரை.

‘‘ஜாமீன்ல வெளியே

வந்த தலைவர் இடைவிடாத பிரசாரத்துக்கு நடுவே என்ன ஓவரா முனகறார்..?’’
‘‘ஜெயில்ல இருந்து தப்பிச்சு
இப்படி வெயில்ல வந்து மாட்டிக்கிட்டேனேன்னு புலம்பறார்..!’’
- சரவணன், கொளக்குடி.

‘‘நாங்கள் ஆட்சிக்கு
வந்தால், நமீதாவை இளைக்க வைத்து ‘இலியானா’ சைஸுக்கு ஆக்குவோம் என்பதை...’’
- பர்வீன் யூனுஸ், சென்னை-44.

 ‘‘தலைவர் எந்தக் கட்சிக்கு இனி தாவுவார் என்பதை சரியாகக் கணித்துச் சொல்பவர்களுக்கு இங்கே சிறப்பு பரிசு காத்திருக்கிறதென்பதை சொல்லக் கடமைப்பட்டுள்ளோம்!’’
- பெ.பாண்டியன், கீழசிவல்பட்டி.

‘‘என்ன தலைவரே! ‘மக்கனே... மக்கனே...’ன்னு பேசறீங்க..?’’
‘‘மக்கள்னா பன்மையாச்சே... இங்க மேடைக்கு எதிர்ல ஒரே ஒருத்தன்தானே இருக்கான்!’’
- வீ.விஷ்ணுகுமார், கிருஷ்ணகிரி.

‘‘ரியல் எஸ்டேட் விளம்பரத்துல தலைவர் நடிக்கும்போதே சந்தேகப்பட்டேன்...’’
‘‘ஏன், என்ன ஆச்சு?’’
‘‘அது புறம்போக்காம்..!’’
- சிக்ஸ் முகம்,
கள்ளியம்புதூர்.

‘‘அப்படி என்னங்கடா
சொல்லி ஓட்டுக்கு பணம் கொடுத்துட்டு வந்தீங்க... இவ்வளவு கேவலமா தோத்திருக்கேன்!’’
‘‘தேர்தல் கமிஷன்கிட்டே நாம மாட்டிக்கக்கூடாதுன்னு வேட்பாளரான உங்களையும் சின்னத்தையும் யார்கிட்டேயும் ‘சொல்லாம’ பணம் கொடுத்துட்டு வந்தோம் தலைவரே!’’
- ம.விருதுராஜா, திருக்கோவிலூர்.