கவிதைக்காரர்கள் வீதி



சமாதானக் கொடியென
நம்பி வந்து
செத்து விழுந்தன
கிழித்த கோட்டில் எறும்புகள்!
- நா.கோகிலன், ஜோலார்பேட்டை.

கைப்பேசியில்
நலம் விசாரிப்புகள்
கடும் பசியில்
தபால் பெட்டி
- சங்கீத சரவணன்,
மயிலாடுதுறை.

கனவு காண்பதென்னவோ
வனச்சோலைகளையும்
வண்ணத்துப்பூச்சிகளையும்தான்...
ஆனால் வசப்படுவதெல்லாம்
கழிப்பறைகளும்
கரப்பான்பூச்சிகளுமாய் இருக்கிறது!
- கு.வைரச்சந்திரன், திருச்சி.



நீரின் நிர்வாணம்
மறைக்கிறது
ஆகாயத் தாமரைகள்
- வீ.உதயக்குமாரன், வீரன்வயல்.

மனமுருக வேண்டினர்,
வெளிநாட்டிலும்
அருள்பாலித்தார்
கடத்தப்பட்ட கடவுள்!
- அ.ராஜப்பன், சென்னை-91.

தடம்புரண்டு செல்கிறது
தண்டவாளத்தில்
பட்டாம்பூச்சி!
- சங்கீதா, மோகனூர்.

பறித்த மலரொன்றின்
பரிசுத்தம் பற்றி
சொல்வதற்கு
என்னிடம்
வார்த்தைகள் ஏதுமில்லை.
- அ.கார்த்திகேயன், சேலம்.