மகளின் காதலை அறுத்த அம்மா





‘லி’ நடிகையைக் காதலிப்பதாக கிசுகிசு வந்து, அந்த ஹீரோயினின் அம்மா எடுத்த தீவிர முயற்சியின் காரணமாக, இப்போது அந்தக் காதலுக்கு ‘குட் பை’ சொல்லிவிட்டாராம், இரண்டெழுத்து ‘வெற்றி’ ஹீரோ. மகளுடன் எந்த நடிகரும் நேரடியாகப் பேசிவிடக் கூடாது என்று, அடிக்கடி செல்போன் நம்பரையும் மாற்றிக் கொண்டிருந்தாராம். அதற்கான பலன் கிடைத்ததில் நடிகையின் குடும்பம் பெரிதும் மகிழ்ந்துள்ளதாம். இதற்கிடையில் ‘லி’யுடனான காதலை முறித்துக்கொண்ட நடிகர், விரைவில் இல்லற வாழ்க்கையில் ஈடுபட முடிவு செய்துள்ளாராம். அதற்காக, ஒரு அழகிய இளம் பெண்ணையும் தேர்வு செய்துவிட்டாராம். அந்தப் பெண் டாக்டர் என்கிறார்கள்.

திரை நட்சத்திரங்களையும், சினிமாவையும் கிண்டல் செய்த ‘டமில் பிலிம்’ படத்தில் நடித்த நடிகருக்கு மீடியாக்களை எப்படி மதிக்க வேண்டும் என்று யாராவது டியூஷன் எடுத்தால் தேவலை. சமீபத்தில் அவருக்கு செல்போனில் பேசினார், மீடியாவைச் சேர்ந்த ஒருவர். ‘உங்க கல்யாண செய்தியை பத்திரிகையில் போடணும். வரப்போற மனைவியை பற்றியும், உங்க மேரேஜ் பற்றியும் சொல்லுங்க’ என்று கேட்டபோது, ‘சொந்த விவகாரத்தை பற்றி எதுவும் கேட்காதீங்க. அது உங்களுக்கு தேவையில்லாத விஷயம்’ என்று, முகத்திலடித்த மாதிரி பேசினாராம். ‘சூப்பர் ஸ்டார் நடிச்ச படத்தின் ரீமேக்கில் நடிப்பதால், தன்னையும் அவர் சூப்பர் ஸ்டாரா நினைச்சுகிட்டார் போலி ருக்கு....’ என்கிறார்கள்.



‘பால்’ நடிகையுடன் உறவு முறிஞ்சு போச்சு என்று, அடிக்கடி சொல்லிக் கொண்டிருப்பார், ‘இளைய தளபதி’யின் பெயரில் இயங்கும் அந்த இளம் இயக்குநர். நடிகையும் தன் பங்குக்கு இதே பல்லவியை பாடி னார். ஆனால், இப்போது நடந்திருப்பது என்ன? ‘இளைய தளபதி’யை இயக்கும் படத்தில் ‘பால்’ நடிகையையே கதாநாயகியாக ஒப்பந்தம் செய்திருக்கிறார், அந்த இயக்குநர். ஆக, இன்னமும் ‘உறவு’ தொடர்கிறது!

தமிழ்ப் படவுலகில் முன்னணி இடத்தைப் பிடிக்க என்ன தகுதி வேண்டும்? தமிழே பேசக்கூடாது. அப்படி தத்தக்கா பித்தக்கா தமிழ் தெரிந்தாலும் கூட, ‘அய் யோ... என்க்கு தமிலே தெர் யாது’ என்பது போல் பேச வேண்டும். மழலைத் தமிழில் பேசினால் போதும், ‘தமிழுக்காக உயிரையே கொடுப்பேன்’ என்று ரீல் விடும் தமிழ் ரசிகன், அந்த ஹீரோயினை சிகரத்தில் வைத்து ஆராதிப்பான். ஹன்ஸ், தமன்னம், தீக்ஷ், யாரேஸ், டாப்ஸ், ம.யாதவ், சோ.அகர்வால், நி.மேனன், னானேசு உள்பட சில ஹீரோயின்களுக்கு தமிழ் தெரியும். என்றாலும், தமிழில் பேச மறுக்கிறார்கள். சமீபத்தில் யாதவ் நடிகையிடம் ஒரு இயக்குநர் பேசினார். தமிழ் தெரிந்த நடிகை, முதலில் ஆங்கிலத்தில் பேசினாராம். ‘ஷூட்டிங்கிற்கு வந்தால், தமிழ் வசனங்களை எப்படிப் பேசுவாரோ’ என்று தயங்கிய இயக்குநர், அந்த நடிகைக்குப் பதிலாக வேறொரு நடிகையை ஒப்பந்தம் செய்ய நினைத்தாராம். இதையறிந்த நடிகை, திடீரென்று இயக்குநருக்கு போன் செய்து, ‘சார்... உங்க படத்துல நானே நடிக்கிறேன் சார்’ என்று கேட்டாராம். அதுவும் சரளமான தமிழில்! வாய்ப்பை நழுவவிடக் கூடாது என்பதற்காகவாவது நடிகை தமிழில் பேசினாரே... சபாஷ்.

அனுஷ்கத்துக்கு சினிமாவில் சம்பாதித்த பணமே கோடி, கோடியாகக் குவிந்து கிடக்கிறது. இந்நிலையில் அம்மணிக்கு சைடு பிசினஸ் செய்வதில் அதிக ஆர்வம் ஏற்பட்டு, ஆந்திரா மற்றும் கர்நாடகாவில் ரியல் எஸ்டேட் தொழிலில் ரகசியமாக ஈடுபட்டுள்ளாராம். இதற்காக கோடிக்கணக்கான ரூபாய் மதிப்பு கொண்ட ஏராளமான காலியிடங்களை வாங்கிப் போட்டுள்ளாராம். நிலம் சம்பந்தமாக வம்பு, வழக்கு, மிரட்டல் என எந்த வில்லங்கம் வந்தாலும், அம்மணிக்கு ஆதரவுக்கரம் நீட்டவும், மிரட்டல்களை முறியடிக்கவும் பல ‘பெரிய புள்ளிகள்’ தயார் நிலையில் இருக்கிறார்களாம்.


முதல் படத்தில் ஒரு குத்துப்பாட்டுக்கு கவர்ச்சி ஆட்டம் போட்ட ரகசியத்தை வெளியே சொல்ல தயக்கம் காட்டுகிறார், ‘ன்கானாச’ நடிகை. அப்படி சொன்னால்தான் என்னவாம்? இப்போது ஹீரோயினாக நடிக்கும் ஓரிரு படத்தின் இமேஜ் பாதிக்கப்படுமாம். அதனால், ஜீவ நடிகருடன் ‘ஈ’யில் கெட்ட ஆட்டம் போட்டதைப் பற்றி சொல்ல மாட்டாராம். அந்த விஷயத்தை தெரிந்துகொண்டு கேள்வி கேட்கும் சிலரிடம், ‘பிளீஸ். அதுபற்றி எதுவும் கேட்க வேண்டாம். எழுத வேண்டாம்’ என்கிறாராம்.

‘இலி’ நடிகைக்கு தமிழ், தெலுங்கு என்றாலே எட்டிக்காயாக கசக்கிறதாம். பாலிவுட்டில் ஜெயிக்க வேண்டும் என்ற லட்சியத்துடன் தன் ஜாகையை மும்பையில் பதித்துள்ள அவர், தன்னை பெரிய அளவில் வளர்த்து விட்டதே டோலிவுட்தான் என்பதை நினைத்துப் பார்த்து, கோடிக்கணக்கில் சம்பளம் கொடுத்தால் மட்டுமே தொடர்ந்து தெலுங்கில் நடிக்க முடிவு செய்துள்ளாராம். தமிழ்? ஊகூம். பிரமாண்ட இயக்குநரின் படம் என்பதாலேயே, ‘பிரெண்ட்’ படத்தில் நடித்தாராம். மற்றபடி அவருக்கு கோலிவுட் பற்றி நல்ல அபிப்பிராயம் இல்லையாம். சீயான் நடிகருடன் ஒப்பந்தமாகி நடிக்காத படத்துக்கு வாங்கிய அரை கோடி அட்வான்சை திருப்பிக் கொடுக்க மனமின்றி, தொடர்ந்து தமிழில் நடிக்கவும் விருப்பமின்றி, பாலிவுட்டே தன் லட்சியம் என்று செயல்படுகிறாராம். சமீபத்தில் அவரிடம், இளைய தளபதியுடன் நடிக்க கால்ஷீட் கேட்டபோது, ஒன்றரை கோடி சம்பளம் கேட்டு அதிர வைத்தாராம். ‘படத்தின் தயாரிப்பு செலவுக்கே பல கோடி ஆகிவிடும். இதில் மூன்று பாட்டுக்கும், ஏழெட்டு சீன்களுக்கும் வந்து போகும் இலிக்கு ஒன்றரையா?’ என்று பயந்து போனவர்கள், நடிகைக்கு மிகப் பெரிய கும்பிடு போட்டுவிட்டு நடையைக் கட்டினார்களாம்.

தமிழில் ஏற்கனவே ஒப்பந்தமான இரு படங்களையும் முடித்துள்ள ‘ஓவிய’ நடிகைக்கு மனரீதியாக என்ன பிரச்னை ஏற்பட்டிருக்கிறது என்று தெரியவில்லை. புதிதாக தன்னைத் தேடி வந்த எல்லா பட வாய்ப்புகளையும் மறுத்துவிட்டாராம். இதுவரை பல படங்களில் நடித்தாகி விட்டது. விஜய், விக்ரம், அஜீத், சூர்யா, கார்த்தி போன்ற மார்க்கெட் வேல்யூ உள்ள ஹீரோக்களின் படங்களில் தனக்கு வாய்ப்பு கிடைக்காதது ஏன் என்ற விசாரணையில் தீவிரமாக மூழ்கியுள்ளாராம். அந்த ஹீரோக்கள் தன்னை வெறுக்கிறார்களா? அல்லது தன்னை யாரென்று அவர்களுக்கு தெரியவில்லையா என்ற குழப்பத்தில் மூழ்கியுள்ள நடிகை, புது ஹீரோக்களுடன் நடிக்க வேண்டும் என்று கேட்ட மறுநிமிடமே, ‘ஸாரி...’ என்று, பட்டென்று செல்போன் இணைப்பை துண்டித்து விடுகிறாராம். இதற்கிடையே தன்னை யாரென்று கோலிவுட்டுக்கு நிரூபிக்க, புதுப்புது டிசைன்களில் கவர்ச்சியாக உடையணிந்து, சினிமா மற்றும் பொதுவிழாக்களில் தரிசனம் தருகிறாராம்.



இசை ராஜாவுக்கு யாராவது தன்னைப் புகழ்ந்தாலே புரையேறி விடுகிறதாம். மேடையில் வைத்து தன்னைப் புகழும் நபர்களிடம், ‘எல்லாரும் நம்மை படைச்ச கடவுளை மட்டுமே புகழணும். இடையில் வந்து, இடையில் மறைந்து போகும் மனிதர்களை புகழ வேண்டாம்’ என்று சொல்லிவிடுகிறாராம். சமீபத்தில் ஒரு படத்தின் ஆடியோ விழாவில், இசைக்கடவுள் என்று ஒரு நடிகர் அவரைப் புகழ்ந்தார். இதில் ஆடிப்போன இசை ராஜா, ‘நீங்க நல்லா மூச்சு விடறீங்கன்னு யார்கிட்டேயாவது சொன்னா, அவர் மூச்சு விடறதுல ஏதோ பிரச்னை இருக்குன்னுதானே அர்த்தம்? எனவே, இந்தமாதிரி என்னை பாராட்டாதீங்க. நான் எனக்கு இடப்பட்ட வேலையை செய்யறேன். நமக்கு மேல ஒருத்தன் இருக்கான். அவனைத்தான் புகழ்ந்து பேசணும். இந்த உடம்பும், உயிரும் அவன் போட்ட பிச்சை’ என்று பதிலடி கொடுத்தாராம்.

‘தன் நொந்த வாழ்க்கையை... ஸாரி, தன் சொந்த வாழ்க்கையைப் பற்றி படம் தயாரித்து, ஸ்கிரிப்ட் எழுதி, அதில் பல்வேறு கெட்டப்புகளில் நடித்து, தன்னுடைய வாழ்க்கையை கிரவுண்டாக நினைத்து கிரிக்கெட் விளையாடிய பலருடைய அந்தரங்க திருவிளையாடல்களை இந்த அகிலமே அறியச் செய்வேன்’ என்பதாக, சில மாதங்களுக்கு முன் மீடியாக்கள் முன்னிலையில் பரபரப்பாகப் பேசி புழுதி கிளப்பிய கவர்ச்சி ‘னாசோ’ நடிகை, இப்போது அந்த திட்டத்தைக் கைவிட்டுள்ள நிலையில், தங்களின் இமேஜ் எங்கே டேமேஜ் ஆகிவிடுமோ என்று பயந்து நடுங்கிக் கொண்டிருந்த சிலபேர், இப்போது நிம்மதிப் பெருமூச்சு விடுகிறார்களாம்.
(படத்தில் இருக்கும் நடிகைகள் வைசாலி, நவ்நீதா, மதுரிமா,ஷிஃவா, மதுலிகா, உஜயகான் ஆகியோருக்கும்  இந்தச் செய்திக்கும் தொடர்பில்லை)