ஐஸ்வர்யா ராஜேஷ்



இவரது தாத்தா அமர்நாத், தந்தை ராஜேஷ், அத்தை ஸ்ரீலட்சுமி ஆகியோர் தெலுங்கு, தமிழ்ப் படங்களில் நடித்தவர்கள். அம்மா நாகமணி. அண்ணன் மணிகண்டா.

ஐந்து வயதில், ‘ராம்பண்டு’ என்ற தெலுங்கு படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார்.

பி.காம் படித்துள்ள இவர், எம்.பி.ஏ படிக்கிறார். தமிழ், தெலுங்கு, ஆங்கிலம், இந்தி தெரியும். டான்சர். வேகமாக நீந்தவும் பயிற்சி பெற்றுள்ளார்.

செவ்வாய்க்கிழமையை ராசியான நாளாக நம்புகிறார். செருப்புகள், ஷூக்கள், ஹேண்ட் பேக்குகள், லிப்ஸ்டிக்குகள் சேகரிக்கிறார். சென்டிமென்ட், சகுனத்தில் அதிக நம்பிக்கை.

‘அவர்களும் இவர்களும்’ படத்தில் ஹீரோயின் ஆனார். ‘சட்டப்படி குற்றம்’, ‘உயர்திரு 420’, ‘அட்ட கத்தி’, ‘ரம்மி’, ‘பண்ணையாரும் பத்மினியும்’ படங்களில் நடித்தார். இப்போது ‘திருடன் போலீஸ்’, ‘காக்காமுட்டை’யில் நடித்து வருகிறார்.

 தேவராஜ்