கலாச்சாரம் மீறாத காதல்கதை!



அடுத்த படத்துக்கான வசனப்பகுதி முழுவதையும் முடித்து விட்டு, பாடல் காட்சிகளுக்குத் தயாராகி வருகிறார் ‘அய்யன்’ பட இயக்குனர் ஏ.ஆர். கேந்திரன் முனியசாமி. படத்தின் பெயர் ‘சேது பூமி’. வீரம் விளையும் மண்ணில் நடக்கும் கதை என்பதை தலைப்பே சொல்லிவிடும் இந்தப் படத்தில் தமன் - சம்ஸ்க்ருதி நாயகன் - நாயகியாக நடிக்கிறார்கள்.

‘‘சேது மன்னர்கள் ஆண்ட பூமியை சேது பூமி என்று எங்கள் வம்சாவளியினர் அழைக்கிறார்கள். முதுகுளத்தூரில் நடந்த ஒரு காதலை, இரண்டு குடும்பங்களின் பின்னணியில் சொல்லியிருக்கிறேன்.

ராயல் மூன் என்டெர்டெய்ன்மென்ட் எம்.ஏ. ஹபீப் தயாரிக்கும் இந்தப்படத்தில் பாரதி- மோனீஷ் என்கிற இரட்டையரின் இசை இடம்பெறுகிறது. முழுப்பாடல்களையும் நந்தலாலா எழுதியுள்ளார். காதலையும் வீரத்தையும் பின்னல்போட்டு ஒளிப்பதிவு செய்திருக்கிறார் முத்துராமலிங்கம். இது கலாச்சாரத்தை மீறாத காதல்கதை’’ என்கிறார் இயக்குனர் கேந்திரன் முனியசாமி.