புலன் விசாரணை



கரண்ட் நியூசை படமாக்குவதில் ஆர்.கே செல்வமணிக்கு நிகர் அவரேதான். பெட்ரோல் ஆராய்ச்சியில் இருக்கும் ஊழியர்கள் குலுமணாலிக்கு சுற்றுலா செல்கிறார்கள். எதிர்பாராதவிதமாக அதில் பயணம் செய்தவர்களுக்கு அதுவே இறுதிப் பயணமாகிறது.

அந்த விபத்து பற்றி விசாரணை நடத்துகிறார் போலீஸ் அதிகாரி பிரசாந்த்.  விபத்து எப்படி நடந்தது என்று துப்பறியும்போது வில்லன் ஆர்.கே.வின் சூழ்ச்சி தெரிகிறது. சூழ்ச்சியை பிரசாந்த் எப்படி முறியடிக்கிறார் என்பதுதான் கதை.

காதல் காட்சியில் இயல்பாகவும், சண்டைக் காட்சியில் மிரட்டலாகவும் நடித்திருக்கிறார் பிரசாந்த். நாயகி கார்த்திகாவுக்கு பாடலுடன் நடிக்கவும் வாய்ப்பு கிடைத்துள்ளது. வில்லனாக வரும் ஆர்.கே.தான் படத்தில் ஸ்பெஷல் அட்ராக்ஷன். அதற்கு பங்கம் வராதளவுக்கு அவருடைய நடிப்பு பக்கா. மன்சூரலிகான், ஆனந்த்ராஜ், பிரகாஷ்ராஜ் என அனை வரும் கொடுத்த வேலையை சரியாகச் செய்திருக்கிறார்கள்.

வசனகர்த்தா லியாகத் அலிகானுக்கு ஸ்பெஷல் பாராட்டு. ராஜராஜனின் ஒளிப்பதி விலும், எஸ்.பி. வெங்கடேஷின் பின்னணி இசையிலும் குறையொன்றுமில்லை. லேட்டாக வந்தாலும் வெல்டன் ஆர்.கே.செல்வமணி.