247 எழுத்துகள்; ஒரு பாடல்!



உலக சினிமா வரலாற்றில் முதன் முறையாக 247 தமிழ் எழுத்துகளையும் பயன்படுத்தி ‘ஆனாவும் இங்கே கானாவும் இங்கே, ஆரம்ப பூமிக்கு ஆரம்பம் இங்கே, ஆதியும் இங்கே அந்தமும் இங்கே, ஐம்பூதம் யாவுக்கும் அடையாளம் இங்கே’ என்ற பாடலை ‘சொல்’ படத்துக்காக பதிவு செய்திருக்கிறார் இயக்குனர் பாவண்ணன். இவர் வி.சேகரின் சிஷ்யர். படத்தின் நாயகனும் இவர்தான். நாயகி அஞ்சனா ராஜ்.

சுற்றுலாவுக்காக அமெரிக்காவிலிருந்து ஊட்டிக்கு வருகிறார் நாயகி. அந்த சமயத்தில் தமிழை நேசிக்கும் நாயகனை சந்திக்கிறார். இருவரும் பழகுகிறார்கள். ஆனால் அவர்களுடைய பழக்கம் நட்பா, காதலா, காமமா என்று வகைப்படுத்த முடியாதளவுக்கு தொடர்கிறது.

வேறு என்ன உறவு இருக்கும் என்பதற்கு ஆழமான விளக்கம் கொடுத்திருக்கிறார்களாம். ‘‘இது தமிழையும், தமிழர்களின் கலாச்சாரத்தை யும் சொல்லும் படமாக இருந்தாலும், இன்றைய சமூக சீரழிவுக்கு யார் காரணம் என்பதையும் சொல்லியிருக்கிறேன்” என்கிறார் பாவண்ணன்.

-ரா