அல்வா அகர்வால்!





வில்லேஜ், சினிமா என ஸ்பெஷல்களுடன் வந்த தீபாவளிக் கொண்டாட்டம், இரட்டைக் குதிரை பூட்டிய வண்டியாகப் பறந்தது. அதில் இலவசமாக வந்த ‘ஜே.கே எனும் நண்பனின் வாழ்க்கை’ ஆடியோ சி.டி., பயணத்தில் மியூசிக் சிஸ்டமாக இனித்தது!
 எம்.சம்பத், வேலாயுதம்பாளையம்.

இனிய இனியாவை அட்டைப் படத்திலே போட்டு விட்டு ஒரு பக்கப் பேட்டி மட்டும்தானா சார்? இனியாவது இனியாவுக்கு தனியா இடம் ஒதுக்குங்க! சரியா?
 என்.அமல்ராஜ், திருப்பூர்.

சாக்பீஸ் தயாரிப்பாளர்களின் கஷ்டங்களை உணர்த்தியது சாக்பீஸ் கிராமம் கட்டுரை. ஊதுபத்தி, மெழுகுவர்த்தி போன்ற கைவினைப் பொருட்களைப் போல ‘சாக்பீஸ்’ தொழிலுக்கும் எந்த சாக்கும்

சொல்லாமல் அரசு ஆதரவளிப்பது
அவசியம்!
 ஏ.சுகுமார், காட்பாடி.

விஜய் சேதுபதிக்கும், சிவகார்த்திகேயனுக்கும் சண்டை மூட்டி விடப் பார்த்த உம்ம நாரதர் வேலையைத் தெரிந்துகொண்டுவிட்டார் வி.சேதுபதி. அவரின் அசத்தல் பதிலால் அம்பேல் ஆயிடுச்சே... உம்ம

திட்டம்!
 டி.பச்சமுத்து, கிருஷ்ணகிரி.

எங்கள் நாயகி காஜல் அகர்வால் திருநெல்வேலி அல்வா மாதிரி... யாருடனும் பச்சக் பச்சக் என்று ஒட்டிக்கொள்கிறார். இந்த வாரம் இளைய தளபதி விஜய்யுடன் மத்தாப்பாய் சிரித்து எங்கள் நெஞ்சில்

ஒட்டி விட்டார்.
 கே.வி.ரவிசங்கர், பழனி.

மக்கள் மனதிலே நிலைத்து நிற்க விரும்பும் சேரனின் ஆசை வரவேற்கத்தக்கது. அவர் மகளுக்கு வந்த இடையூறு சமயத்தில் ஏராளமானதாய்மார்கள் உருகிப் போனதே அவரின் சாதனைக்கு சாட்சி!
 பிரபா லிங்கேஷ்,

மேலகிருஷ்ணன்புதூர்.
யதார்த்த தோற்றம், இயல்பான நகைச்சுவை, அலட்டல் இல்லாத நடிப்பு... இவையே சிவகார்த்திகேயனை ‘வருத்தமே படாத’ வெற்றி நடிகராக உயர்த்தி இருக்கிறது. வாழ்க்கையின் முந்தைய கஷ்டங்களை

இன்றும் உணரும் நல்ல மனிதராய் அவர் இருப்பது மகிழ்வு.
 ஓ.எஸ்.பாலகிருஷ்ணன், கோவில்பட்டி1.

சச்சின் டெண்டுல்கர் ஓய்வை நினைத்து மிகுந்த ஆதங்கத்தில் உள்ள அவரது ரசிகர்களுக்கு ஆறுதலையும் மகிழ்ச்சியையும் தந்தது, ‘ஓய்வுக்குப் பிறகு’ கட்டுரை.
 இரா.வளையாபதி,

தோட்டக்குறிச்சி.
காதலைப் பற்றி கதறக் கதறச் சொல்லி எங்களை கலகலக்க வைத்துவிட்டார் ஆல்தோட்ட பூபதி. எங்களை சிரிப்பு உலகத்திற்கே அழைத்துச் சென்ற பூபதி அண்ணனுக்கு எங்களது தனி பாராட்டுகள்!
 எல்.சகாதேவன், திருச்சி.

இமான் அண்ணாச்சியின் இளமைக் கால சுட்டித்தனத்தையும், சண்டித்
தனத்தையும் பார்க்கும்போது, நம் இளமைக் காலமும் கண்ணில் வந்து போகுதண்ணே!
 கன்யாரி, நாகர்கோவில்.