கவிதைக்காரர்கள் வீதி
*மழையில் கரைய மறுக்கிறது குழந்தை தவறவிட்ட மிட்டாய்! *கடவுளிடமும் அடம்பிடிக்கிறார்கள் குழந்தைகள் *என் நிழலைக் கொடுத்து மரத்தின் நிழலை வாங்கிக்கொள்கிறேன். *தொடர்வண்டியின் தொடர் கவிதை தண்டவாளம் *இறந்த மரத்திற்கு மௌன அஞ்சலி செலுத்துகின்றன தச்சன் வரைந்த கதவுப் பூக்கள்! *வீட்டைப் பாதுகாக்க ஞாபகப்படுத்திக்கொண்டே இருக்கிறது கோயிலில் பார்த்த ‘திருடர்கள் ஜாக்கிரதை’ அறிவிப்புப் பலகை. *காகிதக் கப்பலை சிறைப் பிடித்தது மழைநீர் சேகரிப்புத் தொட்டி கட்டுமாவடி கவி கண்மணி
|