கவிதைக்காரர்கள் வீதி




*மழையில்
கரைய மறுக்கிறது
குழந்தை தவறவிட்ட
மிட்டாய்!

*கடவுளிடமும்
அடம்பிடிக்கிறார்கள்
குழந்தைகள்

*என் நிழலைக்
கொடுத்து
மரத்தின் நிழலை
வாங்கிக்கொள்கிறேன்.

*தொடர்வண்டியின்
தொடர் கவிதை
தண்டவாளம்

*இறந்த மரத்திற்கு
மௌன அஞ்சலி
செலுத்துகின்றன
தச்சன் வரைந்த
கதவுப் பூக்கள்!

*வீட்டைப் பாதுகாக்க
ஞாபகப்படுத்திக்கொண்டே
இருக்கிறது
கோயிலில் பார்த்த
‘திருடர்கள் ஜாக்கிரதை’
அறிவிப்புப் பலகை.

*காகிதக் கப்பலை
சிறைப் பிடித்தது
மழைநீர் சேகரிப்புத்
தொட்டி

கட்டுமாவடி கவி கண்மணி