நியூஸ் வே
தமிழ், தெலுங்கில் ரெடியாகும் ‘நாயகி’ படத்தில் த்ரிஷா ஸ்டில்களைப் பார்த்தால் பூவுக்குள் பூகம்பம் எஃபெக்ட்! இது தவிர, மலையாளத்தில் மம்முட்டி ஜோடியாக நடிக்கக் கேட்டு ஆஃபர் வந்துள்ளது.
உலக பாட்மின்டன் சாம்பியன்ஷிப் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்ற முதல் இந்தியர் என்ற பெருமையைப் பெற்றிருக்கிறார் சாய்னா நெஹ்வால். ‘‘வரிசையான தோல்விகளால் கடந்த ஆண்டு ஓய்வுபெறலாமா என்றுகூட நினைத்தேன். ஐதராபாத்திலிருந்து பெங்களூருவுக்கு வந்து விமல் குமாரிடம் பயிற்சி பெற்ற பிறகு நான் முழுமையாக மாறினேன்’’ என நெகிழும் சாய்னா, இப்போது உலகின் நம்பர் 1 பாட்மின்டன் வீராங்கனை.
சுந்தர்.சியின் ‘அரண்மனை 2’ ஷூட்டிங் செம கலகலப்பாக பொள்ளாச்சியில் போய்க்கொண்டிருக்கிறது. இந்த காமெடி - த்ரில்லரைத்தான் பெரிதும் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார் சித்தார்த்!
மனைவி சுவ்ரா முகர்ஜிக்கு இறுதி அஞ்சலி செலுத்திய நாளில்கூட, தான் ஏற்கனவே ஒப்புக்கொண்ட இரண்டு நிகழ்ச்சிகளுக்கு நேரத்தில் வந்து நடத்திய ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியின் கடமை உணர்வை சொல்லிச் சொல்லி நெகிழ்கிறார்கள் ஜனாதிபதி மாளிகை அதிகாரிகள்.
கிரிக்கெட் வீரர் தினேஷ் கார்த்திக், ஸ்குவாஷ் சாம்பியன் தீபிகா பல்லிக்கல் திருமணம் கிறிஸ்தவ, இந்து சம்பிரதாயங்களின்படி சென்னையில் நடந்தது. தீபிகாவின் அசத்தலான திருமண உடை, அமெரிக்காவில் தயாராகி விமானத்தில் வந்தது.
ரஜினி நடித்த ‘ஜானி’ மறுபடியும் ரீமேக் ஆக இருக்கிறது. ரஜினியின் இரட்டை ரோலில் ‘திருட்டுப் பயலே’ ஜீவன் நடிக்கிறார். தயாரிப்பும் அவரே!
அட்லி இயக்கத்தில் விஜய் நடிக்கும் படத்திற்கு ‘மூன்று முகம்’ எனத் தலைப்பு வைக்க முயற்சி நடக்கிறது. சிக்கல் வந்தால் நேரடியாய் ரஜினியை அணுக முடிவு செய்யப்பட்டிருக்கிறது.
நடிகர் அக்ஷய்குமாரின் மனைவியும் முன்னாள் நடிகையுமான டுவிங்கிள் கண்ணா, ஆங்கிலப் பத்திரிகைகளில் எழுதிய பத்திகளைத் தொகுத்து, `Mrs.funnybones: She’s Just Like You and a Lot Like Me’ என்கிற பெயரில் புத்தகமாக்கியிருக்கிறார். ‘‘என் எழுத்தை எடிட் பண்ணி வடிவம் கொடுத்தது கணவர் அக்ஷய்தான்!’’ என்கிறார் டுவிங்கிள்.
இரண்டாவது முறையாக ராஜபக்ஷேவின் அதிகார வெறியைத் தகர்த்து இலங்கையின் பிரதமர் ஆகியிருக்கிறார் ரணில் விக்கிரமசிங்கே. தனிப் பெரும்பான்மை இல்லாத நிலையில் தமிழர் கட்சிகள் வெளியிலிருந்து தரும் ஆதரவுடன் அவர் ஆட்சி அமைத்திருப்பது, ஈழத் தமிழர்களுக்கு ஒரு புதிய திருப்பமாக அமையக்கூடும்.
‘இஞ்சி இடுப்பழகி’க்காக குண்டாகிவிட்ட அனுஷ்கா, இப்போது ‘ருத்ரமாதேவி’ ரிலீஸ் சந்தோஷத்தில் இன்னும் ஒரு சுற்று பெருத்திருக்கிறார். பட புரமோஷனுக்காக சொகுசு பஸ் ஒன்றை, ருத்ரமாதேவி வாகனமாக மாற்றி ஐதராபாத் முழுக்க வலம் வர வைக்க இருக்கிறார்கள்.
ஒரு விளம்பரப் படத்திற்காக பாங்காக் சென்ற ஜெனிலியா, மால் ஒன்றில் ஷாப்பிங் செய்து கொண்டிருந்தபோது, அதன் எதிரேதான் குண்டு வெடித்து 22 பேரை பலி வாங்கியிருக்கிறது. ரொம்பவே அதிர்ந்து ட்விட்டியிருக்கிறார் ஜெனி.
|