திருட்டைத் தொழிலாக கொண்ட நாயகனுக்கு காதல் பிறக்கிறது. இந்த ஒரு தலை காதல் வெற்றியா தோல்வியா என்பதுதான் கதை. திருட்டுத் தொழில் செய்யும் டிப் டாப் ஆசாமி, காதலன் என்று இரண்டு வித நடிப்பில் கச்சிதமாக நடித்துள்ளார் கிருஷ்ணா.
நாயகி வர்ஷா கவர்ச்சி ஊறுகாய். நந்தா.ஜி., இசையில் முருகன் எழுதியுள்ள ‘என்ன மாற்றம்...’ பாடல் மனதில் நிற்கிறது. துரோகியாக வாழும் ஒருவன் அன்புக்கு எப்படி அடிமையாகிறான் என்பதை சினிமாத்தனம் இல்லாமல் சொல்லியிருக்கிறர் இயக்குநர் பழனி.