சிம்புவுக்கு அதிர்ச்சி தந்த திரிஷா!



‘அலை’, ‘விண்ணைத்தாண்டி வருவாயா’ படங்களில் சிம்புவும் திரிஷாவும் இணைந்து நடித்தார்கள். செல்வராகவன் இயக்கவுள்ள படத்தில் சிம்புவுக்கு ஜோடியாக திரிஷாவை ஒப்பந்தம் செய்திருந்தார்கள். திடீரென்று ‘நான் நடிக்கமாட்டேன்’ என்று சொல்லி, சிம்புவுக்கு ஷாக் கொடுத்திருக்கிறார் திரிஷா. அந்தப்படத்தை வருண் மணியன் தயாரிப்பார் என்கிற தகவல்தான் திரிஷாவின் விலகலுக்குக் காரணமாம்.

டிவி, ரேடியோ விளம்பரங்களுக்கு தரும் முக்கியத்துவத்தை ஃபேஸ்புக், ட்விட்டர் போன்ற தளங்களுக்கும்  தர ஆரம்பித்துள்ளது கோலிவுட் சினிமா. புதுமுகம் சுதாகர், டோனா நடிக்கும் படம் ‘சொக்கனுக்கு பூங்கொடி’. இந்தப் படத்தில் ஹீரோயின், ஹீரோ இருவரும் இளநீர் அருந்தும் புகைப்படத்தை ஃபேஸ்புக்கில் வெளியிட்டுள்ளது படக்குழு. ஒரே நாளில் 5000 லைக்ஸ் அள்ளியதாம். சந்தேகப்படுகிற வாழ்க்கை சந்தோஷம் இல்லாத வாழ்க்கை என்ற கருத்தை மையமாக வைத்து உருவாகும் இந்தப் படத்தை எழுதி இயக்குகிறார் சாணக்யன்.

‘மனம் கொண்ட காதல்’ படத்தின் மூலம் கோலிவுட்டில் தன் கணக்கை ஆரம்பித்தவர் பானுஷா. இயக்குநர் புகழேந்தி தங்கராஜ் இவருடைய நண்பர் என்பதால் சான்ஸ் எளிதில் கிைடத்ததாம். அந்தப் படத்தில் கானா பாலா பாடிய ‘காதல் இல்லா மனுஷங்கதான் பூமியில் இல்ல...’ பாடலுக்கு இவர் ஆடிய குத்தாட்டத்துக்கு ரசிகர்கள் மத்தியில் பெரிய வரவேற்பு கிடைத்ததாம். முதல் படத்திலேயே கேரக்டருக்காக தாடி வளர்த்த இவர், அடுத்த படத்திலேயே மொட்டை அடிக்கவும் தயாராக இருக்கிறாராம். திருநெல்வேலிச் சீமையைச் சேர்ந்த பானுஷாவுக்கு அன்றும் இன்றும் என்றும் ரஜினிதான் ஃபேவரைட்டாம்!